ஜோ பைடனை கட்டியணைத்துக் கொண்ட மோடி!

Date:

ஜி7 கூட்டமைப்பின் வருடாந்திர உச்சி மாநாட்டிற்கு சென்றிருந்த இந்திய பிரதமர் நரேந்திர மோடியும், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனும் கட்டியணைத்து ஒருவரையொருவர் வரவேற்றுக்கொண்டனர்.

வளா்ந்த நாடுகளை உள்ளடக்கிய ஜி7 கூட்டமைப்பின் வருடாந்த உச்சி மாநாடு, ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் மே 19 தொடங்கி 21 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இதில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்க இந்தியாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்ததன் பேரில் பிரதமர் நரேந்திர மோடி இந்த மாநாட்டில் கலந்துகொண்டுள்ளார்.

இதில் கலந்துகொள்வதற்காக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனும் ஹிரோஷிமாவுக்கு வருகை தந்திருந்தார். மாநாடு நடைபெறும் அரங்கத்துக்கு வந்த ஜோ பைடனை வரவேற்கும் விதமாக அவரை கட்டியணைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

அவரின் கையைப் பிடித்து பேசிவிட்டு பின்னர், ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடாவிடம் பைடன் சென்றார்.

அரங்கத்தில் பல நாடுகளின் தலைவர்கள் அமர்ந்திருந்த நிலையில், ஜோ பைடன், நரேந்திர மோடியை கட்டியணைத்து வரவேற்றமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக முனீர் முலஃபர் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்

மத மற்றும் கலாச்சார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக  முனீர் முலாஃபர்...

பாலின சமத்துவத்தை முழுமையாக அடைய தொடர்ச்சியான அர்ப்பணிப்பு தேவை: பிரதமர்

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம்...

கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் நீடிப்பு: கல்வியமைச்சு

நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி...

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...