தொழிலாளர்கள் உரிமைகளுக்காக மாத்திரமன்றி சர்வாதிகாரத்தை எதிர்க்கவும் போராடியுள்ளார்கள்: ஜமாஅத்தே இஸ்லாமி தலைவர்

Date:

மே தினம் உழைப்பாளிகளின் பெருமையை உலகுக்கு பறைசாற்றும் உன்னத தினமாகும். சாதி, மத, இன, மொழி, பிரதேச, நிற வேறுபாடுகளுக்கு அப்பால் முழு மனித குலமும் கொண்டாடும் தினமாக அனுஷ்டிக்கப்படுகின்து என இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி தலைவர் எம்.எச்.எம். உஸைர் இஸ்லாஹி தெரிவித்துள்ளார்.

மே தினத்தை முன்னிட்டு இன்று (01) விசேட அறிக்கையொன்றை விடுத்துள்ளார்.

அதில் மனித வரலாற்றில் தொழிலாளர்கள் தங்களது உரிமைகளுக்காக மாத்திரமன்றி சர்வாதிகாரத்தை எதிர்க்கவும் மனித உரிமைகளைப் பாதுகாக்கவும் போராடியுள்ளார்கள்.

உலகத்தில் தோன்றிய அனைத்து சீர்திருத்தவாதிகளோடும் ஒன்றிணைந்து உழைத்தவர்களில் அதிகமானவர்கள் தொழிலாளர்களே. பிரான்ஸ், இங்கிலாந்து, அமெரிக்கா, ரஷ்யப் புரட்சிகளும் கியூபா, வியட்னாமின் விடுதலைப் போராட்டங்களும் உழைப்பாளர்களின் தியாகத்தின் பெறுபேறுகளாகும்.

இன்று நாம் எதிர்நோக்கியுள்ள வறுமை வேலையின்மை விலைவாசி உயர்வு போன்றவற்றால் சமூகத்தில் ஏற்பட்டு வரும் பாரிய ஏற்றத்தாழ்வுகளுக்கும் இன முரண்பாடுகள், கல்லாமை, இல்லாமை போன்ற பிரச்சினைகளுக்குமான தீர்வும் உழைக்கும் வர்க்கத்தினர்களின் சாத்வீகமான போராட்டத்தின் மூலமாகவே சாத்தியமாகும்.

மே தினத்தை கொண்டாடும் இன் நன்னாளில் உழைப்பாளர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் எமது இதயம் கனிந்த மே தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம் எனவும் குறித்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...