இலங்கையில் அணுமின் நிலையத்தை நிர்மாணிக்க ரஷ்யாவின் Rosatom நிறுவனத்துடன் ஒப்பந்தம்

Date:

இரு அணு உலைகளுடனான 300 மெகாவாட் சக்தியை உற்பத்தி செய்யக்கூடிய அணுமின் நிலையத்தை நிர்மாணிக்க ரஷ்யாவின் அணுசக்தி துறையில் பிரபல நிறுவனமான ரொஸெடம் (Rosatom) உடன் இலங்கை ஒப்பந்தம் செய்துள்ளதாக ரஷ்யாவுக்கான இலங்கை தூதுவர் தெரிவித்துள்ளார்.

சென் பீட்டர்ஸ் பேர்க்கில் நேற்று (14) நடைபெற்ற சர்வதேச பொருளாதார மாநாட்டில் கலந்து கொண்ட போதே இலங்கைக்கான ரஷ்யாவின் தூதுவர் பேராசிரியர் ஜனிதா அபேவிக்ரம லியனகே இதனைத் தெரிவித்தார்.

மேலும்,இலங்கையில் அணுமின் நிலையத்தை அமைப்பதற்கான ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இது 300 மெகாவாட் ஆற்றல் கொண்ட பாரிய செயற்திட்டம் எனவும் தெரிவித்தார்.

கடந்த நாட்களில் கடுமையான எரிசக்தி நெருக்கடியை எதிர்கொண்ட இலங்கைக்கு சொந்தமான மின் உற்பத்தி நிலையம் இருப்பது எரிசக்தி நெருக்கடியில் இருந்து விடுபட பெரும் ஆறுதலாக உள்ளது என தெரிவித்த தூதுவர், அதன் பணிகளை விரைவில் தொடங்குவதற்கான பூர்வாங்க பணிகள் ஏற்கனவே நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.

அமைச்சரவையின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ள திட்ட முன்மொழிவு தொடர்பில் சர்வதேச அணுசக்தி முகமையின் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும், அதனை ஆய்வு செய்வதற்கு குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், குறித்த செயற்திட்டத்திற்கான சாத்தியக்கூறு ஆய்வுகள் நான்கு பகுதிகளில் ரொஸெடம் (Rosatom) நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ரஷ்யாவுக்கான இலங்கை தூதுவர் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

சிறந்த நாட்டை உருவாக்குவதற்கான கூட்டு முயற்சிக்கு உழைக்கும் மக்களுக்கு அழைப்பு:: ஜனாதிபதியின் மே தின வாழ்த்து!

உலகளாவிய போர்ச் சூழல்களுக்கு மத்தியிலும், ஒரு நாடாகப் பல பொருளாதார வெற்றிகளை...

ஞானசார தேரர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு பிணையில் விடுதலை!

இஸ்லாமிய மார்க்கத்திற்கு அவதூறு விளைவிக்கும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில், பொதுபல...

இலங்கை – இத்தாலி இடையே சாரதி அனுமதிப்பத்திர ஒப்பந்தம் ஏப்ரல் முதல் அமுல்!

இலங்கைக்கும் இத்தாலிக்கும் இடையேயான நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திர உரிமம் பரஸ்பர...

‘அல் மன்ஹஜ்ஜுஸ் ஸஹீஹ்’: சமூக ஒருமைப்பாட்டை பேணுவதில் கவனம் செலுத்த வேண்டும்

இலங்கைத் திருநாட்டின் தேசிய வரைபடத்தில், முஸ்லிம் சமூகம் என்பது எப்போதும் 'வேற்றுமைக்குள்...