உணவுப் பாதுகாப்பின்மையை எதிர்கொள்ளும் 75 இலட்சம் மக்கள்

Date:

இலங்கையில் 75 இலட்சம் மக்கள் கடுமையான உணவுப் பாதுகாப்பின்மையை எதிர்கொள்வதாக பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறை பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார்.

இது மொத்த குடும்பங்களின் எண்ணிக்கையில் 33 வீதம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,

ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் உணவுப் பாதுகாப்பற்ற 23 நாடுகளில் இலங்கை 20ஆவது இடத்தில் உள்ளமை ஆய்வில் தெரியவந்துள்ளதாக தெரிவித்தார்.

நாட்டிலுள்ள 57 இலட்சம் குடும்பங்களில் 37 இலட்சம் குடும்பங்கள் அரசாங்கத்திடம் ஏதாவது ஒரு உதவியை கோரியுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், மொத்தக் குடும்பங்களில் 65 வீதமான குடும்பங்கள் வாழ்க்கைச் செலவை ஈடுசெய்வதில் பாரிய பிரச்சினைகளை எதிர்நோக்கி வருவதாகத் தெரிவித்தார்.

Popular

More like this
Related

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...