உள்நாட்டு பிரச்சினைகளை ஜெனிவாவுக்கு கொண்டு செல்லப்போவதில்லை: அரசாங்கம் தீர்மானம்

Date:

இலங்கையின் உள்நாட்டு பிரச்சினைகளை தொடர்ந்தும் ஜெனிவா மனித உரிமை ஆணைக்குழுவுக்கு எடுத்துச் செல்வதில்லை என அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில் சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அரசாங்கம் ஸ்தாபித்துள்ள உண்மையை கண்டறியும் ஆணைக்குழுவின் ஊடாக உள்நாட்டு பிரச்சினைகள் சம்பந்தமாக பேச்சுவார்த்தை நடத்தி அவற்றுக்கு தீர்வை வழங்குவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

அமைச்சரவையின் அங்கீகாரத்துடன் ஸ்தாபிக்கப்பட்டுள்ள இந்த ஆணைக்குழுவின் தலைவராக சட்டத்தரணி அசங்க குணவர்தன செயற்பட்டு வருகிறார்.

வருடந்தோறும் ஜூன் மாதத்தில் ஜெனிவாவில் நடைபெறும் மனித உரிமைகள் தொடர்பான மாநாட்டில் ஆணைக்குழுவின் அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளதுடன் அது தொடர்பான தீர்மானத்தை அமெரிக்க உட்பட மேற்குலக நாடுகள் எடுக்கும் என கூறப்படுகிறது.

எவ்வாறாயினும் இது இலங்கையின் இறையாண்மைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் நடவடிக்கை என சிங்கள பத்திரிகை தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

ஞானசார தேரர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு பிணையில் விடுதலை!

இஸ்லாமிய மார்க்கத்திற்கு அவதூறு விளைவிக்கும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில், பொதுபல...

இலங்கை – இத்தாலி இடையே சாரதி அனுமதிப்பத்திர ஒப்பந்தம் ஏப்ரல் முதல் அமுல்!

இலங்கைக்கும் இத்தாலிக்கும் இடையேயான நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திர உரிமம் பரஸ்பர...

‘அல் மன்ஹஜ்ஜுஸ் ஸஹீஹ்’: சமூக ஒருமைப்பாட்டை பேணுவதில் கவனம் செலுத்த வேண்டும்

இலங்கைத் திருநாட்டின் தேசிய வரைபடத்தில், முஸ்லிம் சமூகம் என்பது எப்போதும் 'வேற்றுமைக்குள்...

சொத்து விபரங்களை வழங்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு 2 வார காலக்கெடு!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், தனது சொத்து மற்றும் பொறுப்புக்கள்...