கஜேந்திரகுமார் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னரே பாராளுமன்றத்திற்கு அனுமதிக்கப்படுவார்: சபாநாயகர்

Date:

பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னரே  பாராளுமன்ற அமர்வுகளில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை கைது செய்ய வேண்டும் எனவும், அவர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னரே பாராளுமன்ற அமர்வுகளில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார் எனவும் பொலிஸார் என்னிடம் தெரிவித்தனர் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் கேள்விக்கு சபாநாயகர் பதிலளித்தார்.

“பொலிஸார்  தம்  கடமையைச்  செய்வதிலிருந்து எம்மால் தடுக்க முடியாது” என சபாநாயகர் மேலும் தெரிவித்தார்.

கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் சித்தாந்தங்களுடன் நாங்கள் உடன்படவில்லை ஆனால் பாராளுமன்றத்திற்கு வந்து அறிக்கை வெளியிட அவருக்கு உரிமை இருப்பதாக நாங்கள் கருதுகிறோம் என சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

Popular

More like this
Related

8 ஜனாதிபதி மாளிகைகளுக்கு செலவான 8 கோடி ரூபாய் : வெளியான அறிக்கை

ஜனாதிபதி செயலகத்தின் கடந்த 2024 ஆம் ஆண்டுக்கான பராமரிப்பு பற்றிய செலவுகள்...

பேருவளையில் நடைபெற்ற ஸீரா மாநாடு மற்றும் நூல் வெளியீட்டு விழா

ஸீரா மாநாடு மற்றும் நூல் வெளியீட்டு விழா பேருவளை ZIMICH மண்டபத்தில்...

முடிவுக்கு வரும் இரண்டாண்டு போர்?:எகிப்தில் இஸ்ரேல்-ஹமாஸ் தரப்பு பேச்சுவார்த்தை!

கடந்த 2023ம் ஆண்டு காசாவில் உள்ள பலஸ்தீனர்கள் மீது இஸ்ரேல் தாக்குதலை...

நாளாந்த சேவையில் காங்கேசன்துறை – நாகபட்டினம் கப்பல் !

காங்கேசன்துறைக்கும் நாகபட்டினத்திற்கும் இடையேயான பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவையை வாரத்தில் அனைத்து...