கல்வியற் கல்லூரி ஆசிரியர் பயிலுனர்களுக்கு 16 ஆம் திகதி நியமனம்!

Date:

தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் உள்ள ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கு 39,000 ஆசிரியர்கள் நியமிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று (06) எதிர்க்கட்சித் தலைவர்சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே கல்வி அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும், இம்முறை ஒரே நேரத்தில் இரண்டு மடங்கு ஆசிரியர்கள் ஓய்வு பெறுவதால் கடுமையான ஆசிரியர் பற்றாக்குறை நிலவும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

“கல்வியற் கல்லூரி ஆசிரியர்கள் பயிலுனர்கள் ஏழாயிரம் பேருக்கு எதிர்வரும் 16ஆம் திகதி நியமனம் வழங்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

இதனை தவிற தேசிய மற்றும் மாகாண மட்டத்தில் நிலவும் வெற்றிடங்களை நிவர்த்தி செய்ய 26 ஆயிரம் பட்டதாரிகளை இணைத்துக் கொள்ள விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

Online விளையாட்டிற்கு அடிமையான மாணவன் தவறான முடிவெடுத்து தற்கொலை!

யாழ்ப்பாணத்தில் ஆன்லைன் விளையாட்டிற்கு (Online Games) அடிமையான 19 வயதுடைய பாடசாலை...

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகலில் மழை

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் இன்று (30) பி.ப. 1.00 மணிக்குப் பின்னர்...

சுரேஷ் சலே நீதிமன்ற வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்...

இலங்கையில் முகத்தை வெண்மையாக்கும் கிரீம் பயன்படுத்துபவர்களுக்கு நுகர்வோர் விவகார அதிகார சபை எச்சரிக்கை!

நுகர்வோர் விவகார அதிகார சபை பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இலங்கை சந்தையில்...