நாடாளுமன்ற விவகாரங்களுக்கான விசேட குழு கூட்டம் இன்று!

Date:

அடுத்த மாதம் முதலாம் திகதி சனிக்கிழமை  உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு தொடர்பான பிரேரணையை விவாதிப்பதற்காக அவசர நாடாளுமன்றக் கூட்டம் நடைபெறவுள்ள நிலையில் அது தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுப்பதற்காக நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழுவின் விசேட கூட்டம் இன்று நடைபெறவுள்ளது.

இந்த விவாதத்திற்குப் பின்னர் வாக்கெடுப்பு இடம்பெறும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் இது தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஆளும் கட்சி உறுப்பினர்கள் குழு கூட்டம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் எதிர்வரும் 28 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

இந்த அவசர நாடாளுமன்றக் கூட்டம் காரணமாக அனைத்து அமைச்சர்களையும் இந்த வாரம் கொழும்பில் தங்குமாறு ஆளும் கட்சி அமைப்பாளர் அலுவலகம் ஏற்கனவே அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சமர்ப்பித்த மனு அடுத்த மாதம் ஒத்திவைப்பு

இலஞ்ச ஆணைக்குழுவினால் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் தன்னை கைது செய்யப்படுவதற்கு முன்...

காசா நகரை கைப்பற்ற இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல்!

காசாவின் நகரப் பகுதியை முழுமையாகக் கைப்பற்றும் பெஞ்சமின் நெதன்யாகுவின் திட்டத்திற்கு இஸ்ரேலிய...

நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை

இன்றையதினம் (08) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...