பல அரச நிறுவனங்கள் நிதி அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டு விசேட வர்த்தாமானி வெளியீடு

Date:

ஸ்ரீலங்கா டெலிகொம், கொழும்பு தாமரை கோபுரம், இலங்கை சீமெந்து கூட்டுத்தாபனம், அரச பொறியியல் கூட்டுத்தாபனம் மற்றும் பல அரச நிறுவனங்களை நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சரின் கீழ் கொண்டுவந்து வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் வெளியிடப்பட்ட வர்த்தமானியின் பிரகாரம், நோர்த் சீ லிமிடெட், இலங்கை த்ரிபோஷ லிமிடெட், கலோயா பிளான்டேஷன் (பிரைவேட்) நிறுவனம், தேசிய உப்பு நிறுவனம், பரந்தன் இரசாயன நிறுவனம் ஆகியவையும் நிதி அமைச்சரின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.

அரசியலமைப்பின் 44 வது பிரிவின் பத்தி (1) இன் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி, மே 30 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில், அரச தலைவரால் இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

 

 

Popular

More like this
Related

நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!

நேபாள நாடாளுமன்றத் தோ்தலில், இளைஞா்களின் ஆதரவு பெற்ற ‘ராப்’ பாடகரும், முன்னாள்...

நாட்டில் இன்று வறட்சியான வானிலை!

நாட்டில் இன்று (07) வறட்சியான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம்...

இலங்கையிலுள்ள அமெரிக்கர்களுக்குத் தூதரகம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

மத்திய கிழக்கில் நிலவும் தற்போதைய சூழ்நிலைக்கு மத்தியில், புதிய பாதுகாப்புத் தகவல்களைப்...

இலங்கை எடுத்துள்ள தீர்மானம் ஆபத்தானது, ஆனால் துணிச்சலானது!

ஈரானுக்குச் சொந்தமான IRIS Bushehr கப்பல் இலங்கை கடல் எல்லைக்குள் நுழைவதற்கும்,...