போர் காலத்தில் கூட ஞாயிற்றுக்கிழமைகளில் நாடாளுமன்றம் கூடியதில்லை-ஹரினி அமரசூரிய

Date:

நாட்டில் போர் நடைபெற்ற காலத்தில் கூட ஞாயிற்றுக் கிழமைகளில் நாடாளுமன்றம் கூட்டப்படவில்லை என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

போர் காலத்தில் கூட வார இறுதி நாட்களில் கூட நாடாளுமன்றத்தை அவசரமாக சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் கூட்டியுள்ளனர்.

மக்களின் பிரச்சினைகளை புரிந்து கொள்ளாது, ஒரு நபரின் தேவைக்கு அமைந்து இது நடக்கின்றது என்பது தெளிவாகியுள்ளது.

அவசரமாக வங்கிகளுக்கு 5 நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. வரலாற்றில் எப்போதும் ஞாயிற்றுக் கிழமைகளில் நாடாளுமன்றம் கூட்டப்பட்டதில்லை.

வரவு செலவுத்திட்டம் விவாதங்களில் போது, மிக அரிதாக சனிக்கிழமை நாடாளுமன்றம் கூடும். பிரித்தானிய நாடாளுமன்றம் கூட ஞாயிற்றுக் கிழமைகளில் கூடியதில்லை.

அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் ஆலோசனைகளை நடைமுறைப்படுத்தி மக்களின் வறுமையை அதிகரித்து வருகிறது.

மக்களின் பிரச்சினைகளுக்கு ஓரளவுக்கு பாதுகாப்பை வழங்கிய சமூக நிவாரணங்களையும் அரசாங்கம் படிப்படியாக இல்லாமல் ஆக்கி வருகிறது எனவும் ஹரினி அமரசூரிய குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

Online விளையாட்டிற்கு அடிமையான மாணவன் தவறான முடிவெடுத்து தற்கொலை!

யாழ்ப்பாணத்தில் ஆன்லைன் விளையாட்டிற்கு (Online Games) அடிமையான 19 வயதுடைய பாடசாலை...

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகலில் மழை

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் இன்று (30) பி.ப. 1.00 மணிக்குப் பின்னர்...

சுரேஷ் சலே நீதிமன்ற வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்...

இலங்கையில் முகத்தை வெண்மையாக்கும் கிரீம் பயன்படுத்துபவர்களுக்கு நுகர்வோர் விவகார அதிகார சபை எச்சரிக்கை!

நுகர்வோர் விவகார அதிகார சபை பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இலங்கை சந்தையில்...