போர் காலத்தில் கூட ஞாயிற்றுக்கிழமைகளில் நாடாளுமன்றம் கூடியதில்லை-ஹரினி அமரசூரிய

Date:

நாட்டில் போர் நடைபெற்ற காலத்தில் கூட ஞாயிற்றுக் கிழமைகளில் நாடாளுமன்றம் கூட்டப்படவில்லை என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

போர் காலத்தில் கூட வார இறுதி நாட்களில் கூட நாடாளுமன்றத்தை அவசரமாக சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் கூட்டியுள்ளனர்.

மக்களின் பிரச்சினைகளை புரிந்து கொள்ளாது, ஒரு நபரின் தேவைக்கு அமைந்து இது நடக்கின்றது என்பது தெளிவாகியுள்ளது.

அவசரமாக வங்கிகளுக்கு 5 நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. வரலாற்றில் எப்போதும் ஞாயிற்றுக் கிழமைகளில் நாடாளுமன்றம் கூட்டப்பட்டதில்லை.

வரவு செலவுத்திட்டம் விவாதங்களில் போது, மிக அரிதாக சனிக்கிழமை நாடாளுமன்றம் கூடும். பிரித்தானிய நாடாளுமன்றம் கூட ஞாயிற்றுக் கிழமைகளில் கூடியதில்லை.

அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் ஆலோசனைகளை நடைமுறைப்படுத்தி மக்களின் வறுமையை அதிகரித்து வருகிறது.

மக்களின் பிரச்சினைகளுக்கு ஓரளவுக்கு பாதுகாப்பை வழங்கிய சமூக நிவாரணங்களையும் அரசாங்கம் படிப்படியாக இல்லாமல் ஆக்கி வருகிறது எனவும் ஹரினி அமரசூரிய குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...