வடக்கில் இனங்களுக்கு இடையில் இனவாதத்தை ஏற்படுத்த முயற்சி:பலாங்கொட காசியப்ப தேரர்

Date:

வடக்கில் தமிழ் மக்களுக்கும் சிங்கள மக்களுக்கும் இடையில் இனவாத்தை ஏற்படுத்த சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் நடவடிக்கை எடுத்து வருவதாக பலாங்கொட காசியப்ப தேரர் தெரிவித்துள்ளார்.

திரியாய், குருந்தூர்மலை விகாரைகள் தொடர்பாக ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் சம்பந்தமாக இன்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

திரியாய் விகாரையை சுற்றி தமிழ் மக்களின் வயல் காணிகள் இருப்பதாக சாணக்கியன் ராசமாணிக்கம் சுமத்தும் குற்றச்சாட்டு பொய்யானது. அந்த பிரதேசத்தில் வயல் காணிகள் எதுவுமில்லை.

ஆயிரணக்கான வருட வரலாற்றுக்கு உரிமை கோரும் இந்த பிரதேசத்தில் கடந்த போர் காலத்தில் சிலர் காணிகளை கைப்பற்றி இருந்தாலும் பௌத்த வழிப்பாட்டு தலங்கள் இருந்தமைக்கான தொல்லியல் சான்றுகள் அங்கு இருக்கின்றன.

அரச வளங்கள் விற்பனை செய்யப்படுவது சம்பந்தமாக மக்கள் அறிந்திருக்க வேண்டும்.

பௌத்த சமயத்திற்கு அவமதிப்பை ஏற்படுத்திய சம்பவங்கள் தொடர்பாக மேலும் சிலருக்கு எதிராக விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் காசியப்ப தேரர் மேலும் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

நிரந்தர சமாதானத்திற்கு மாவட்ட சர்வமத அமைப்புக்களின் பங்களிப்பு குறித்து விளக்கிய மாகாண மட்ட கலந்துரையாடல்!

இலங்கை தேசிய சமாதான பேரவை ஏற்பாடு செய்த நல்லிணக்கம் மற்றும் சமூக...

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...