வடக்கில் இனங்களுக்கு இடையில் இனவாதத்தை ஏற்படுத்த முயற்சி:பலாங்கொட காசியப்ப தேரர்

Date:

வடக்கில் தமிழ் மக்களுக்கும் சிங்கள மக்களுக்கும் இடையில் இனவாத்தை ஏற்படுத்த சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் நடவடிக்கை எடுத்து வருவதாக பலாங்கொட காசியப்ப தேரர் தெரிவித்துள்ளார்.

திரியாய், குருந்தூர்மலை விகாரைகள் தொடர்பாக ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் சம்பந்தமாக இன்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

திரியாய் விகாரையை சுற்றி தமிழ் மக்களின் வயல் காணிகள் இருப்பதாக சாணக்கியன் ராசமாணிக்கம் சுமத்தும் குற்றச்சாட்டு பொய்யானது. அந்த பிரதேசத்தில் வயல் காணிகள் எதுவுமில்லை.

ஆயிரணக்கான வருட வரலாற்றுக்கு உரிமை கோரும் இந்த பிரதேசத்தில் கடந்த போர் காலத்தில் சிலர் காணிகளை கைப்பற்றி இருந்தாலும் பௌத்த வழிப்பாட்டு தலங்கள் இருந்தமைக்கான தொல்லியல் சான்றுகள் அங்கு இருக்கின்றன.

அரச வளங்கள் விற்பனை செய்யப்படுவது சம்பந்தமாக மக்கள் அறிந்திருக்க வேண்டும்.

பௌத்த சமயத்திற்கு அவமதிப்பை ஏற்படுத்திய சம்பவங்கள் தொடர்பாக மேலும் சிலருக்கு எதிராக விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் காசியப்ப தேரர் மேலும் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...