வரி திருத்தத்திற்கு எதிராக மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படும்!

Date:

அண்மைய வரி திருத்தத்திற்கு எதிராக மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA ) எச்சரித்துள்ளது.

தொழில் வல்லுனர்களுக்கு சுமையாக உள்ள அண்மைய வரி அதிகரிப்பை திருத்தும் திட்டத்தை அரசாங்கம் அறிவிக்க வேண்டும் என சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் ஒரு தீர்மானத்திற்கு வந்து அதன் திட்டத்தை வாரத்திற்குள் அறிவிக்கத் தவறினால், ஏனைய நிபுணர்களின் ஆதரவுடன் சில நடவடிக்கைகளை எடுக்க வேண்டியிருக்கும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

GMOA மற்றும் தொழில் வல்லுநர்கள் எவ்வாறு திருத்தங்களைச் செய்ய வேண்டும் என்பது குறித்து ஏற்கனவே அதிகாரிகளுக்கு தங்கள் முன்மொழிவுகளை வழங்கியுள்ளனர்.

வரி தொடர்பான தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் தொழிற்சங்க நடவடிக்கையை தவிர வேறு வழியில்லை என அவர் மேலும் எச்சரித்துள்ளார்.

Popular

More like this
Related

சிறந்த நாட்டை உருவாக்குவதற்கான கூட்டு முயற்சிக்கு உழைக்கும் மக்களுக்கு அழைப்பு:: ஜனாதிபதியின் மே தின வாழ்த்து!

உலகளாவிய போர்ச் சூழல்களுக்கு மத்தியிலும், ஒரு நாடாகப் பல பொருளாதார வெற்றிகளை...

ஞானசார தேரர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு பிணையில் விடுதலை!

இஸ்லாமிய மார்க்கத்திற்கு அவதூறு விளைவிக்கும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில், பொதுபல...

இலங்கை – இத்தாலி இடையே சாரதி அனுமதிப்பத்திர ஒப்பந்தம் ஏப்ரல் முதல் அமுல்!

இலங்கைக்கும் இத்தாலிக்கும் இடையேயான நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திர உரிமம் பரஸ்பர...

‘அல் மன்ஹஜ்ஜுஸ் ஸஹீஹ்’: சமூக ஒருமைப்பாட்டை பேணுவதில் கவனம் செலுத்த வேண்டும்

இலங்கைத் திருநாட்டின் தேசிய வரைபடத்தில், முஸ்லிம் சமூகம் என்பது எப்போதும் 'வேற்றுமைக்குள்...