விடுதலைப் புலிகளினால் கொல்லப்பட்ட முஸ்லிம்களை நினைவுகூறும் வகையில் கல்குடா பகுதியில் நினைவுத் தூபி திறந்து வைப்பு!

Date:

கல்குடா பிரதேசத்தில் விடுதலைப் புலிகளினால் கொலை செய்யப்பட்ட முஸ்லிம் சமூகத்தவர்களை நினைவுகூர்ந்து பெயர்கள் அடங்கிய நினைவுத் தூபி ஒன்று சனியன்று (24) திறந்து வைக்கப்பட்டுள்ளது.

முப்படையினரைப் பிரதிநிதித்துவப்படுத்தி 233வது படைப்பிரிவின் கட்டளையிடும் அதிகாரி கேணல் கமல் டி சில்வா, வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி வசந்த பண்டார, கல்குடா பொலிஸ் பொறுப்பதிகாரி சந்திரகுமார ஆகியோரும் நிகழ்வில் பங்கெடுத்தனர்.

இராணுவ மற்றும் பொலிஸ் அதிகாரிகள் இணைந்து நினைவுத் தூபியை திரைநீக்கம் செய்தனர்.

விடுதலைப்புலிகளால் கொல்லப்பட்ட முஸ்லிம்களின் பெயர்களும் நினைவுத்தூபியில் பொறிக்கப்பட்டுள்ளது.

பொலனறுவையில் இருந்து வருகை தந்த சிங்கள மக்கள் மற்றும் ஓட்டமாவடியைச் சேர்ந்த முஸ்லிம் மக்களும் நினைவுத் தூபி திறப்பு நிகழ்வில் பங்கெடுத்திருந்தனர்.

Popular

More like this
Related

பிரபல ஊடகவியலாளர் இக்பால் அதாஸ் மரணம்.

பிரபல ஊடகவியலாளர் இக்பால் அதாஸ் இயற்கை எய்தியுள்ளார். 81 வயதான அவர்...

நாட்டின் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை

இன்றையதினம் (12) நாட்டின் வடக்கு, கிழக்கு, வடமத்திய, ஊவா, மத்திய மாகாணங்களில்...

விமல் வீரவங்சவின் போராட்டம்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச உள்ளிட்ட சிவில் அமைப்புகளின்...

சீன உதவியை விரிவாக்க கோரிக்கை: அமைச்சர் விஜித ஹேரத் சீன வெளியுறவு அமைச்சருடன் சந்திப்பு.

தென்னாப்பிரிக்காவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு சீனா திரும்பும் வழியில், இன்று காலை...