விலை குறைப்பின் பலன் நுகர்வோருக்கு கிடைக்கவில்லை :பொதுமக்கள் குற்றச்சாட்டு

Date:

எரிவாயு மற்றும் பல அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை குறைந்த போதிலும் தமக்கு பலன் கிடைக்கவில்லை என ஹட்டன் பிரதேச நுகர்வோர் விசனம் தெரிவிக்கின்றனர்.

எரிவாயு உள்ளிட்ட பல அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் மருந்துப் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ள போதிலும், குறைக்கப்பட்ட விலைகளுடன் ஒப்பிடும் போது வர்த்தகர்கள் அதன் பயனை நுகர்வோருக்கு வழங்குவதில்லை என ஹட்டன் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

எரிவாயு உள்ளிட்ட பல அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் குறைந்திருந்தாலும் ஹட்டன் உள்ளிட்ட பெருந்தோட்டங்களின் பிரதான நகரங்களில் உள்ள உணவகங்களில் விற்பனை செய்யப்படும் சமைத்த உணவின் விலை குறைக்கப்படவில்லை.

அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் மருந்துப் பொருட்களின் விலைகளை அரசாங்கம் குறைத்துள்ளதாக கூறினாலும் ஆனால் அந்த பொருட்களை விற்பனை செய்யும் வர்த்தகர்களே இதனால் பயனடைவதாகவும் நுகர்வோர் கூறுகின்றனர்.

இதேவேளை அதிகரித்த மின்சார கட்டணம் மற்றும் ஏனைய பொருட்களின் விலைகள் மேலும் ஊழியர்களின் சம்பளம் ஆகியவற்றை பார்க்கும்போது தமது உணவகங்களில் சமைத்த உணவுப் பொருட்களை குறைந்த விலையில் வாடிக்கையாளர்களுக்கு வழங்க முடியாத நிலை உள்ளதாக உணவக உரிமையாளர்கள் கூறுகின்றனர்.

Popular

More like this
Related

NPP அரசுக்கு சவாலாக மிலிந்த மொரகொட முயற்சியில் புதிய எதிர்க்கட்சிக் கூட்டணி. ஹக்கீம், ரிஷாதும் இணைவு

தேசிய மக்கள் கட்சி அரசாங்கத்துக்கு சவால் விடுக்கும் வகையில் ஒரு பரந்த...

முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் கைது!

முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னாள் பொலிஸ்மா அதிபர்...

சுகாதார அமைச்சில் விடுமுறை வழங்குவது இடைநிறுத்தம்

சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சு அதன் பணியாளர்களுக்கான விடுமுறை அனுமதிகளை...

தபால் ஊழியர்களின் வேலைநிறுத்தத்தால் சர்வதேச தபால் சேவைகள் தேக்கம்!

தபால் ஊழியர்களின் தொடர்ச்சியான வேலைநிறுத்தம் காரணமாக, பல்வேறு நாடுகளிலிருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட...