அரை சொகுசு தனியார் பஸ்களை சேவையிலிருந்து நீக்கும் தீர்மானத்திற்கு எதிராக வழக்கு தாக்கல்!

Date:

அரை சொகுசு தனியார் பேருந்துகளை சேவையில் இருந்து நீக்குவதற்கு போக்குவரத்து அமைச்சு எடுத்த தீர்மானத்தை இடைநிறுத்தக் கோரி மாகாணங்களுக்கு இடையிலான பேருந்து சேவை சங்கம் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளது.

எந்தவொரு மாற்று வழியையும் தயாரிக்காமல் அரசாங்கம் எடுத்த தீர்மானத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக மாகாணங்களுக்கு இடையிலான பஸ் சேவை சங்கத்தின் தலைவர் சரத் விஜித குமார தெரிவித்துள்ளார்.

அனைத்து மாகாணங்களுக்கிடையிலான பஸ் சேவை தொழிற்சங்கங்களும் இணைந்து இந்த முறைப்பாட்டை சமர்ப்பித்துள்ளதாகவும், இதற்கு அனைத்து தொழிற்சங்க உறுப்பினர்களும் தமது ஆதரவை தெரிவித்துள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

கடந்த 2018 ஆம் ஆண்டு அரை சொகுசு தனியார் பேருந்துகளை இயக்குவதில் இருந்து நீக்க முடிவு எடுக்கப்பட்டது, ஆனால் அதை அப்போது அரசால் செயல்படுத்த முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது .

Popular

More like this
Related

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...

தொடர்ந்தும் தலைமறைவானால் ராஜிதவின் சொத்துக்கள் பறிமுதலாகும்: இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுஆணைக்குழு

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தொடர்ந்தும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானால் அவரது...

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த காலமானார்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான...

யானைகள் இறப்பு விகிதத்தில் உலகளவில் இலங்கை முதலிடம்!

யானைகள் இறப்பு விகிதத்தில் இலங்கை தற்போது உலகிலேயே முதலிடத்தில் உள்ளதாக வனவிலங்கு...