அரை சொகுசு தனியார் பஸ்களை சேவையிலிருந்து நீக்கும் தீர்மானத்திற்கு எதிராக வழக்கு தாக்கல்!

Date:

அரை சொகுசு தனியார் பேருந்துகளை சேவையில் இருந்து நீக்குவதற்கு போக்குவரத்து அமைச்சு எடுத்த தீர்மானத்தை இடைநிறுத்தக் கோரி மாகாணங்களுக்கு இடையிலான பேருந்து சேவை சங்கம் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளது.

எந்தவொரு மாற்று வழியையும் தயாரிக்காமல் அரசாங்கம் எடுத்த தீர்மானத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக மாகாணங்களுக்கு இடையிலான பஸ் சேவை சங்கத்தின் தலைவர் சரத் விஜித குமார தெரிவித்துள்ளார்.

அனைத்து மாகாணங்களுக்கிடையிலான பஸ் சேவை தொழிற்சங்கங்களும் இணைந்து இந்த முறைப்பாட்டை சமர்ப்பித்துள்ளதாகவும், இதற்கு அனைத்து தொழிற்சங்க உறுப்பினர்களும் தமது ஆதரவை தெரிவித்துள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

கடந்த 2018 ஆம் ஆண்டு அரை சொகுசு தனியார் பேருந்துகளை இயக்குவதில் இருந்து நீக்க முடிவு எடுக்கப்பட்டது, ஆனால் அதை அப்போது அரசால் செயல்படுத்த முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது .

Popular

More like this
Related

இலங்கையிலுள்ள அமெரிக்கர்களுக்குத் தூதரகம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

மத்திய கிழக்கில் நிலவும் தற்போதைய சூழ்நிலைக்கு மத்தியில், புதிய பாதுகாப்புத் தகவல்களைப்...

இலங்கை எடுத்துள்ள தீர்மானம் ஆபத்தானது, ஆனால் துணிச்சலானது!

ஈரானுக்குச் சொந்தமான IRIS Bushehr கப்பல் இலங்கை கடல் எல்லைக்குள் நுழைவதற்கும்,...

ஓமான் வாழ் இலங்கையர்களின் நலன் மற்றும் பாதுகாப்பு: ஓமான் வெளிவிவகார அமைச்சருடன் விஜித ஹேரத் கலந்துரையாடல்!

இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் ஓமான் வெளிவிவகார அமைச்சர்...

ஈரானிய வீரர்களை மீட்டது இலங்கையின் சிறந்த வெளியுறவுக் கொள்கையின் அடையாளம்: அலி சப்ரி பாராட்டு

ஈரானிய வீரர்களை மீட்டெடுத்தமை மற்றும் அந்த கப்பலுக்கு இலங்கைக் கடற்பரப்பில் அனுமதி...