இந்திய பிரதமர் மோடிக்கு எகிப்து அரசின் உயரிய விருதான’ஆர்டர்ஆஃப் தி நைல்’விருது!

Date:

பிரதமர் மோடிக்கு எகிப்து அரசின் உயரிய விருதான ‘ஆர்டர் ஆஃப் தி நை ல்’ விருது வழங்கப்பட்டது.

எகிப்து தலைநகர் கெய்ரோவில் உள்ள அதிபர் மாளிகையில் பிரதமர் மோடி, அதிபர் அப்தெ ல் ஃபத்தா அல்-சிசி சந்திப்பு நடைபெற்றது.

கெய்ரோ அதிபர் மாளிகைக்கு வருகை தந்த பிரதமர் மோடியை அதிபர் அப்தெல் பத்தா அல்-சிசி வாயிலுக்கு வந்து வரவேற்றா ர்.

பிரதமர் மோடி, அதிபர் அப்தெல் ஃபத்தா அல்-சிசி இடையேயான சந்திப்பின் போது இரு நாடுகள் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

எகிப்து அரசின் உயரிய விருதான ‘ஆர்டர் ஆஃப் தி நைல்’ விருது பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டது. அதிபர் அப்தெ ல் ஃபத்தா அல்-சி சி விருதை வழங்கி கவுரவித்தார்.

முன்னதாக இன்று காலை ஹெலியோ பொலிஸ் போர் நினைவுச் சின்னத்திற்கு
சென்ற பிரதமர், முதலாம் உலகப்போரில் வீர மரணம் அடைந்த இந்திய வீரர்களுக்காக அங்கு வைக்கப்பட்டுள்ள நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை
செலுத்தினார்.

கெய்ரோவில் உள்ள 11ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பழமையான அல்-ஹக்கீம் மசூதி யையும் பிரதமர் மோடி பார்வையிட்டார்.

இந்தியாவிலுள்ள தாவூதி போரா சமூகத்தவரின் நிதி உதவியுடன் அல்-ஹக்கீம் மசூதி அண்மையில் புதுப்பிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

சுரேஷ் சலே நீதிமன்ற வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்...

இலங்கையில் முகத்தை வெண்மையாக்கும் கிரீம் பயன்படுத்துபவர்களுக்கு நுகர்வோர் விவகார அதிகார சபை எச்சரிக்கை!

நுகர்வோர் விவகார அதிகார சபை பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இலங்கை சந்தையில்...

பிரிமா கோதுமை மாவின் விலை அதிகரிப்பு

பிரிமா (Prima) நிறுவனத்தினால் கோதுமை மாவின் விலை இன்று (29) முதல்...

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இன்று நீதிமன்றத்தில் ஆஜர்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று (29) நீதிமன்றத்தில்...