‘உள்ளூர் முட்டைகளை 44 ரூபாவுக்கு வழங்க முடியும்’

Date:

சதொசவின் ஊடாக உற்பத்தி பொருட்களை வழங்க முடியுமெனின், உள்ளூர் முட்டைகளை 44 ரூபா தொடக்கம் 46 ரூபா வரை உத்தரவாதத்துடன் வழங்க முடியும் என அகில இலங்கை கோழி வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார்.

வர்த்தக அமைச்சருடன் கலந்துரையாடி கோழி உற்பத்தி தொடர்பில் எமது உற்பத்தி செலவுகளை அவர்களுக்கு தெரிவித்ததாகவும் அவர் தெரிவித்தார்.

அதன்படி, சுமார் 1600 ரூபாவாக இருந்த ஒரு கிலோ கோழி இறைச்சியை 1400 ரூபாவாக குறைக்க முடிந்ததாக தெரிவித்தார்.

முக்கியமான கால்நடை தீவனப் பொருளான சோளம் தட்டுப்பாடடைந்த காரணத்தினால் சில பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியிருந்ததாகவும் அவ்வாறான நிலைமைகளில் 95 வீதமான சோளத்தை வெளிநாட்டு விவசாயிகளிடமிருந்து பெற்றுக்கொண்டதாக அவர் தெரிவித்தார்.

Popular

More like this
Related

சுரேஷ் சலே நீதிமன்ற வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்...

இலங்கையில் முகத்தை வெண்மையாக்கும் கிரீம் பயன்படுத்துபவர்களுக்கு நுகர்வோர் விவகார அதிகார சபை எச்சரிக்கை!

நுகர்வோர் விவகார அதிகார சபை பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இலங்கை சந்தையில்...

பிரிமா கோதுமை மாவின் விலை அதிகரிப்பு

பிரிமா (Prima) நிறுவனத்தினால் கோதுமை மாவின் விலை இன்று (29) முதல்...

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இன்று நீதிமன்றத்தில் ஆஜர்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று (29) நீதிமன்றத்தில்...