ஊடக அடக்குமுறைச் சட்டங்களுக்கு எதிராக ஐ.நா தலையீடு வேண்டும்: சிவில் ஆர்வலர்கள்

Date:

ஒலிபரப்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் ஊடாக ஊடகங்களை ஒடுக்க அரசாங்கம் முயற்சிப்பதால் உடனடியாக தலையிடுமாறு மக்கள் போராட்ட இயக்கத்தின் பிரஜைகள் ஐக்கிய நாடுகள் சபையிடம் முறையான கோரிக்கையை விடுத்துள்ளனர்.

இலங்கை ஐ.நா.வில் அங்கத்துவம் பெற்றுள்ளதால் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவுடன் இணைந்து அரசாங்கம் கொண்டு வர முயற்சிக்கும் சட்டம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் உடனடி தலையீட்டை நாட வேண்டும் என மக்கள் போராட்ட பிரஜைகள் அமைப்பின் பொதுச் செயலாளர் சானக்க பண்டார தெரிவித்துள்ளார்.

“மக்கள் தகவல் அறியும் உரிமையைப் பயன்படுத்துவதற்கான ஒரே வழி ஊடகம். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் அரசாங்கமும் ஜனநாயகத்தை அழிக்க முயற்சிக்கின்றனர். ரணில் விக்கிரமசிங்க ஹிட்லர், முசோலினி அல்லது போல்போட் போன்றவராக இருக்க விரும்புகிறாரா என நாங்கள் ஆச்சரியப்படுகிறோம்.

“ஊடகங்களை ஒடுக்குவதற்கு அரசாங்கம் பொதுவான கொள்கையை கடைப்பிடிக்கிறது. சர்வாதிகாரிகளை என்றென்றும் ஆட்சி செய்ய முடியாது என்பதை அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டும். அத்தகைய ஆட்சியாளர்களை மக்கள் விரட்டியடித்தனர்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...