கல்வியற் கல்லூரி ஆசிரியர் பயிலுனர்களுக்கு 16 ஆம் திகதி நியமனம்!

Date:

தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் உள்ள ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கு 39,000 ஆசிரியர்கள் நியமிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று (06) எதிர்க்கட்சித் தலைவர்சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே கல்வி அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும், இம்முறை ஒரே நேரத்தில் இரண்டு மடங்கு ஆசிரியர்கள் ஓய்வு பெறுவதால் கடுமையான ஆசிரியர் பற்றாக்குறை நிலவும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

“கல்வியற் கல்லூரி ஆசிரியர்கள் பயிலுனர்கள் ஏழாயிரம் பேருக்கு எதிர்வரும் 16ஆம் திகதி நியமனம் வழங்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

இதனை தவிற தேசிய மற்றும் மாகாண மட்டத்தில் நிலவும் வெற்றிடங்களை நிவர்த்தி செய்ய 26 ஆயிரம் பட்டதாரிகளை இணைத்துக் கொள்ள விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

திரைப்படத் துறையில் தீர்க்கப்படாத பிரச்சினைகளுக்கு ஜனாதிபதியினால் தீர்வு

சினிமாவின் முன்னேற்றம் நாட்டு மக்களின் ஆன்மீக வளர்ச்சியில் தாக்கம் செலுத்துகிறது என்றும்,...

பெண்களுக்கு எதிரான டிஜிட்டல் வன்முறையை எதிர்த்துப் போராட ‘அவளுக்கான வாக்குறுதி’ பிரசாரத்தை ஆரம்பித்த Inglish Razor.

2025 நவம்பர் 25: பெண்களுக்கு எதிரான வன்முறையை இல்லாதொழிப்பதற்கான சர்வதேச தினத்தை...

மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை: மக்களை உடனடியாக வெளியேறுமாறு அறிவித்தல்.

நாட்டின் இரண்டு பகுதிகளின் மக்களை உடனடியாக வெளியேறுமாறு அறிவித்து மண்சரிவு சிவப்பு...

நாட்டில் வேலையின்றி இருக்கும் 365,951 பேர்: பிரதமர் தகவல்!

நாட்டில் தற்சமயம் 365,951 பேர் வேலையின்றி இருப்பதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய...