கல்வியற் கல்லூரி ஆசிரியர் பயிலுனர்களுக்கு 16 ஆம் திகதி நியமனம்!

Date:

தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் உள்ள ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கு 39,000 ஆசிரியர்கள் நியமிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று (06) எதிர்க்கட்சித் தலைவர்சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே கல்வி அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும், இம்முறை ஒரே நேரத்தில் இரண்டு மடங்கு ஆசிரியர்கள் ஓய்வு பெறுவதால் கடுமையான ஆசிரியர் பற்றாக்குறை நிலவும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

“கல்வியற் கல்லூரி ஆசிரியர்கள் பயிலுனர்கள் ஏழாயிரம் பேருக்கு எதிர்வரும் 16ஆம் திகதி நியமனம் வழங்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

இதனை தவிற தேசிய மற்றும் மாகாண மட்டத்தில் நிலவும் வெற்றிடங்களை நிவர்த்தி செய்ய 26 ஆயிரம் பட்டதாரிகளை இணைத்துக் கொள்ள விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

2026 முதல் 6 மாதங்களுக்குள் மாகாண சபைத் தேர்தலை நடத்த திட்டம்!

மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட்ட பின்னர் அரசியலமைப்புத் திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று...

வடக்கு-கிழக்கில் இன்று ஹர்த்தால்!

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்று திங்கட்கிழமை (18) காலை...

பாடசாலை மூன்றாம் தவணை இன்று ஆரம்பம்!

அரச அங்கீகாரம் பெற்ற தமிழ், சிங்கள பாடசாலைகளின் மூன்றாம் தவணைக்கான கல்வி...

நாட்டின் பல பகுதிகளில் மழையற்ற வானிலை

இன்றையதினம் (18) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி,...