தெஹியோவிட்ட,தெரணியகல பகுதிகளுக்கு 2 ஆம் நிலை மண்சரிவு எச்சரிக்கை!

Date:

கேகாலை மாவட்டத்தில் தெஹியோவிட்ட மற்றும் தெரணியகல பிரதேச செயலகப் பிரிவுகளில் வசிப்பவர்களுக்கு 2 ஆம் நிலை மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள எச்சரிக்கை இரவு 7 மணி வரை அமுலில் இருக்கும்.

மேலும், நான்கு மாவட்டங்களில் பல பகுதிகளுக்கு முதல் நிலை மண்சரிவு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மாவட்டத்தில் சீதாவக பிரதேச செயலகப் பிரிவு, களுத்துறை மாவட்டத்தின் இங்கிரிய பிரதேச செயலகப் பிரிவு, கேகாலை மாவட்டத்தில் யட்டியந்தோட்டை பிரதேச செயலகப் பிரிவு மற்றும் நிவித்திகல, இரத்தினபுரி, குருவிட்ட, கிரியெல்ல, எஹெலியகொட, எல்ஹெலியகொட ஆகிய பிரதேசங்களில் வசிப்பவர்களுக்கு 1ஆம் நிலை மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இரத்தினபுரி மாவட்டத்தில் கலவான, பெல்மடுல்ல மற்றும் அயகம பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...