தேசிய பாடசாலைகளை மேற்பார்வையிட குழு: கல்வி அமைச்சு தீர்மானம்

Date:

தேசிய பாடசாலைகளை மேற்பார்வையிட கல்வி நிர்வாக சேவை உத்தியோகத்தர்களை கொண்ட குழுவொன்றை உருவாக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

முறையான ஒழுங்குமுறை முறையைப் பின்பற்றி இந்தப் பாடசாலைகளை வழமையான நிலைக்குக் கொண்டுவருவதே இந்த வேலைத்திட்டத்தின் நோக்கமாகும் என கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த நேற்று (11) தெரிவித்துள்ளார்.

தேசிய பாடசாலைகள் தொடர்பில் முறையான கண்காணிப்பு செயற்பாடுகள் இல்லாத காரணத்தினால் அமைச்சு இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதுடன், அமைச்சின் தேசிய பாடசாலை பிரிவும் மாகாண கல்வி அமைச்சும் இணைந்து இந்த அணியை நியமிக்கவுள்ளது.

சில தேசிய பாடசாலைகளின் செயற்பாடுகள் பல வருடங்களாக கண்காணிக்கப்படவில்லை எனவும், சில தேசிய பாடசாலைகள் பெயருக்கு மாத்திரம் இயங்கும் நிலை காணப்படுவதால் அதற்கான தேவை குறைந்துள்ளதாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

Popular

More like this
Related

ஞானசார தேரர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு பிணையில் விடுதலை!

இஸ்லாமிய மார்க்கத்திற்கு அவதூறு விளைவிக்கும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில், பொதுபல...

இலங்கை – இத்தாலி இடையே சாரதி அனுமதிப்பத்திர ஒப்பந்தம் ஏப்ரல் முதல் அமுல்!

இலங்கைக்கும் இத்தாலிக்கும் இடையேயான நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திர உரிமம் பரஸ்பர...

‘அல் மன்ஹஜ்ஜுஸ் ஸஹீஹ்’: சமூக ஒருமைப்பாட்டை பேணுவதில் கவனம் செலுத்த வேண்டும்

இலங்கைத் திருநாட்டின் தேசிய வரைபடத்தில், முஸ்லிம் சமூகம் என்பது எப்போதும் 'வேற்றுமைக்குள்...

சொத்து விபரங்களை வழங்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு 2 வார காலக்கெடு!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், தனது சொத்து மற்றும் பொறுப்புக்கள்...