தேசிய பாடசாலைகளை மேற்பார்வையிட குழு: கல்வி அமைச்சு தீர்மானம்

Date:

தேசிய பாடசாலைகளை மேற்பார்வையிட கல்வி நிர்வாக சேவை உத்தியோகத்தர்களை கொண்ட குழுவொன்றை உருவாக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

முறையான ஒழுங்குமுறை முறையைப் பின்பற்றி இந்தப் பாடசாலைகளை வழமையான நிலைக்குக் கொண்டுவருவதே இந்த வேலைத்திட்டத்தின் நோக்கமாகும் என கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த நேற்று (11) தெரிவித்துள்ளார்.

தேசிய பாடசாலைகள் தொடர்பில் முறையான கண்காணிப்பு செயற்பாடுகள் இல்லாத காரணத்தினால் அமைச்சு இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதுடன், அமைச்சின் தேசிய பாடசாலை பிரிவும் மாகாண கல்வி அமைச்சும் இணைந்து இந்த அணியை நியமிக்கவுள்ளது.

சில தேசிய பாடசாலைகளின் செயற்பாடுகள் பல வருடங்களாக கண்காணிக்கப்படவில்லை எனவும், சில தேசிய பாடசாலைகள் பெயருக்கு மாத்திரம் இயங்கும் நிலை காணப்படுவதால் அதற்கான தேவை குறைந்துள்ளதாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...