பஸ் சாரதி மீது சிறுநீர் தாக்குதல்: பயணிகளும் சிறுநீரில் குளித்தனர்!

Date:

இலங்கை போக்குவரத்து சபையின் திவுலபிட்டிய டிப்போவிற்கு சொந்தமான பஸ் சாரதி ஒருவர் மீது மினுவாங்கொடை பஸ் நிலையத்தில் வைத்து சிறுநீர் வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

கொழும்பில் இருந்து மினுவாங்கொடை நோக்கி பயணித்த தனியார் பஸ்ஸில் பயணிகளை ஏற்றிக் கொள்வதற்காக மினுவாங்கொடை பஸ் நிலையத்தில் பஸ்ஸை நிறுத்திய போது குருநாகல் நோக்கி சென்று கொண்டிருந்த பஸ் சாரதி ஒருவர் சிறுநீர் வீசி தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.

தனியார் பேருந்தின் சாரதி போத்தலில் சிறுநீரை எடுத்துச் சென்று இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளதாகவும், பஸ்சில் இருந்த பயணிகளும் சிறுநீரால் நனைந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பயணிகளை ஏற்றிச் செல்லும் போது இரு சாரதிகளுக்கு இடையில் ஏற்பட்டதாகக் கூறப்படும் தகராறு காரணமாகவே இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது, இது தொடர்பில் மினுவாங்கொடை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Popular

More like this
Related

முடிவுக்கு வரும் இரண்டாண்டு போர்?:எகிப்தில் இஸ்ரேல்-ஹமாஸ் தரப்பு பேச்சுவார்த்தை!

கடந்த 2023ம் ஆண்டு காசாவில் உள்ள பலஸ்தீனர்கள் மீது இஸ்ரேல் தாக்குதலை...

நாளாந்த சேவையில் காங்கேசன்துறை – நாகபட்டினம் கப்பல் !

காங்கேசன்துறைக்கும் நாகபட்டினத்திற்கும் இடையேயான பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவையை வாரத்தில் அனைத்து...

பலஸ்தீன சர்வதேச ஊடக மற்றும் தொடர்பாடல் மன்றத்தின் இலங்கைப் பிரதிநிதியாக மூத்த ஊடகவியலாளர் என்.எம். அமீன் நியமனம்

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் முன்னாள் தலைவர் சிரேஷ்ட ஊடகவியலாளர் என்.எம்....

பெரும்பாலான பகுதிகளில் மாலையில் இடியுடன் மழை

இன்றையதினம் (05) நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மாலை வேளையில் இடியுடன் கூடிய...