மொட்டுக்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுக்கு அமைச்சு பதவிகளை வழங்க முடியாது: அரசாங்கம்

Date:

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அமைச்சு பதவிகளை வழங்குமாறு பரிந்துரைத்துள்ள சிரேஷ்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு உடனடியாக அமைச்சு பதவிகளை வழங்க முடியாது என அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளதாக தெரியவருகிறது.

தனிப்பட்ட ரீதியில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அரசாங்கம் இதனை அறிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

எஸ்.பி.திஸாநாயக்க, ரோஹித்த அபேகுணவர்தன, எஸ்.எம்.சந்திரசேன, சனத் நிஷாந்த, காமினி லொக்குகே ஆகிய சிரேஷ்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் தனிப்பட்ட ரீதியில் அரசாங்கத்தின் உயர் மட்ட அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டு அவர்களிடம் இதனை அறிவித்துள்ளதாக பேசப்படுகிறது.

உடனடியாக அமைச்சு பதவிகளை வழங்க முடியாவிட்டாலும் அவர்கள் தமது அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுத்து செல்ல தேவையான வசதிகளை அரசாங்கம் வழங்கும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

ஞானசார தேரர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு பிணையில் விடுதலை!

இஸ்லாமிய மார்க்கத்திற்கு அவதூறு விளைவிக்கும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில், பொதுபல...

இலங்கை – இத்தாலி இடையே சாரதி அனுமதிப்பத்திர ஒப்பந்தம் ஏப்ரல் முதல் அமுல்!

இலங்கைக்கும் இத்தாலிக்கும் இடையேயான நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திர உரிமம் பரஸ்பர...

‘அல் மன்ஹஜ்ஜுஸ் ஸஹீஹ்’: சமூக ஒருமைப்பாட்டை பேணுவதில் கவனம் செலுத்த வேண்டும்

இலங்கைத் திருநாட்டின் தேசிய வரைபடத்தில், முஸ்லிம் சமூகம் என்பது எப்போதும் 'வேற்றுமைக்குள்...

சொத்து விபரங்களை வழங்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு 2 வார காலக்கெடு!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், தனது சொத்து மற்றும் பொறுப்புக்கள்...