‘வடக்கு,கிழக்கு மாகாணங்களுக்கு காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை வழங்க இணங்கவில்லை’

Date:

வடக்கு மற்றும் கிழக்கு மாகாண சபைகளுக்கு காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை வழங்குவது தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எந்த இணக்கத்தையும் வெளியிடவில்லை என அந்த கட்சியின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

இது சம்பந்தமாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது, மாகாண சபைகளுக்கு காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை வழங்குவது தொடர்பான கட்சியின் நிலைப்பாட்டை தெளிவுப்படுத்தியுள்ளோம்.

அத்துடன் காணி மற்றும் பொலிஸ் அதிகாரிகளை வழங்குவது தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகரவும் தனது நிலைப்பாட்டை முன்வைத்தார்.

1987 ஆம் ஆண்டு இந்திய-இலங்கை உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்ட பின்னர், இதுவரை மாகாணங்களுக்கு ஏன் காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்படவில்லை என்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டும்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை வழங்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு மக்கள் ஆணை கிடைக்கவில்லை.

இதனால், அவர் புதிய மக்கள் ஆணையை பெற்றுக்கொள்ள வேண்டும் என சரத் வீரசேகர கூறியதாகவும் காரியவசம் மேலும் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

திரைப்படத் துறையில் தீர்க்கப்படாத பிரச்சினைகளுக்கு ஜனாதிபதியினால் தீர்வு

சினிமாவின் முன்னேற்றம் நாட்டு மக்களின் ஆன்மீக வளர்ச்சியில் தாக்கம் செலுத்துகிறது என்றும்,...

பெண்களுக்கு எதிரான டிஜிட்டல் வன்முறையை எதிர்த்துப் போராட ‘அவளுக்கான வாக்குறுதி’ பிரசாரத்தை ஆரம்பித்த Inglish Razor.

2025 நவம்பர் 25: பெண்களுக்கு எதிரான வன்முறையை இல்லாதொழிப்பதற்கான சர்வதேச தினத்தை...

மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை: மக்களை உடனடியாக வெளியேறுமாறு அறிவித்தல்.

நாட்டின் இரண்டு பகுதிகளின் மக்களை உடனடியாக வெளியேறுமாறு அறிவித்து மண்சரிவு சிவப்பு...

நாட்டில் வேலையின்றி இருக்கும் 365,951 பேர்: பிரதமர் தகவல்!

நாட்டில் தற்சமயம் 365,951 பேர் வேலையின்றி இருப்பதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய...