விலை குறைப்பின் பலன் நுகர்வோருக்கு கிடைக்கவில்லை :பொதுமக்கள் குற்றச்சாட்டு

Date:

எரிவாயு மற்றும் பல அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை குறைந்த போதிலும் தமக்கு பலன் கிடைக்கவில்லை என ஹட்டன் பிரதேச நுகர்வோர் விசனம் தெரிவிக்கின்றனர்.

எரிவாயு உள்ளிட்ட பல அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் மருந்துப் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ள போதிலும், குறைக்கப்பட்ட விலைகளுடன் ஒப்பிடும் போது வர்த்தகர்கள் அதன் பயனை நுகர்வோருக்கு வழங்குவதில்லை என ஹட்டன் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

எரிவாயு உள்ளிட்ட பல அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் குறைந்திருந்தாலும் ஹட்டன் உள்ளிட்ட பெருந்தோட்டங்களின் பிரதான நகரங்களில் உள்ள உணவகங்களில் விற்பனை செய்யப்படும் சமைத்த உணவின் விலை குறைக்கப்படவில்லை.

அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் மருந்துப் பொருட்களின் விலைகளை அரசாங்கம் குறைத்துள்ளதாக கூறினாலும் ஆனால் அந்த பொருட்களை விற்பனை செய்யும் வர்த்தகர்களே இதனால் பயனடைவதாகவும் நுகர்வோர் கூறுகின்றனர்.

இதேவேளை அதிகரித்த மின்சார கட்டணம் மற்றும் ஏனைய பொருட்களின் விலைகள் மேலும் ஊழியர்களின் சம்பளம் ஆகியவற்றை பார்க்கும்போது தமது உணவகங்களில் சமைத்த உணவுப் பொருட்களை குறைந்த விலையில் வாடிக்கையாளர்களுக்கு வழங்க முடியாத நிலை உள்ளதாக உணவக உரிமையாளர்கள் கூறுகின்றனர்.

Popular

More like this
Related

வடக்கு-கிழக்கில் இன்று ஹர்த்தால்!

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்று திங்கட்கிழமை (18) காலை...

பாடசாலை மூன்றாம் தவணை இன்று ஆரம்பம்!

அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கான 2025 ஆம்...

நாட்டின் பல பகுதிகளில் மழையற்ற வானிலை

இன்றையதினம் (18) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி,...

தபால் ஊழியர்கள் நாளை பணிப்புறக்கணிப்பு

இலங்கை தபால் ஊழியர்கள் நாளை (17) வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். தபால்...