ஹஜ் செய்வதற்கான தொகையை வியாபாரத்தில் முதலீடு செய்திருந்தால் அவர் மீது ஹஜ் கடமையாகும்: ஜம்இய்யதுல் உலமா பத்வாப் பிரிவு

Date:

இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கு ஹஜ் கடமையாவதற்கான மாதிரி வழிகாட்டலொன்றை அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் பத்வாப் பிரிவு நேற்று வெளியிட்டுள்ளது.

இலங்கையிலிருந்து முதலாவது ஹஜ் குழு நாட்டை விட்டுப் புறப்பட்டுள்ள நிலையில் ஹஜ் வழிகாட்டல் தொடர்பிலான மூன்றாவது வழிகாட்டலாக இதனை உலமா சபை வெளியிட்டுள்ளது.

இந்த வழிகாட்டலில் ஹஜ் கடமைக்கான பணத்தை தன்னிடமிருக்கும் சொத்துக்களில் இருந்து பெறுவதற்கான வழிகள் எடுத்துக் காட்டப்பட்டுள்ளன.

தன்னிடம் கைவசமுள்ள பணம், வேறு வருமானங்கள், தகுதிக்கு மேலதிகமான வீடு, வியாபாரத்தில் செய்துள்ள முதலீடுகள் இவற்றிலிருந்து பணத்தைப் பெற்று ஹஜ் செய்ய முடியும்.

இவற்றிலிருந்து பெறப்படும் பணம் ஹஜ்ஜுக்குச் சென்று வருவதற்கான தொகையை அடைந்து அத்தொகைப் பணம் அவருடைய பராமரிப்பில் உள்ளவர்களுக்குத் தேவையான செலவு மற்றும் அவர் வழங்க வேண்டிய கடன் தொகையை விட மேலதிகமானதாக இருந்தால் அவர் மீது ஹஜ் கடமையாகிவிடும் என குறித்த வழிகாட்டலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தனக்குப் பொறுத்தமான வீடொன்றில்லாமல் வாடகை வீட்டில் வசிப்பவர்கள் மீது ஹஜ் கடமையில்லை எனவும் குறித்த வழிகாட்டலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வழிகாட்டலில் வழங்கப்பட்டுள்ள உதாரணத்தின்படி ஹஜ் செய்வதற்காக முகவர்களுக்கு வழங்க வேண்டிய தொகைக்குச் சமனான தொகையை வியாபாரத்தில் முதலீடு செய்திருக்கும் ஒருவர் அந்த முதலீட்டை மீளப் பெற்று ஹஜ் செய்வது கடமையாகும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வழிகாட்டலின்படியே இலங்கை வாழ் முஸ்லிம்களின் மீது ஹஜ் கடமையாகிறது எனவும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் பத்வாப் பிரிவு தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

49வது சென்னை புத்தக கண்காட்சி: தமிழ் உலகின் மிகச்சிறந்த புத்தக கண்காட்சி ஜனவரி 8 முதல் 21 வரை சென்னை நந்தனம் அரங்கில்..!

சென்னை நந்தனத்தில் அமைந்துள்ள YMCA மைதானத்தில் நடைபெற்று வரும் புத்தக விற்பனையாளர்கள்...

‘பிரதமர் பதவியில் மாற்றமில்லை’: அரசின் அறிவிப்பு சொல்வதென்ன? சிரேஷ்ட சட்டத்தரணி பாரிஸ் சாலி.

பிரதமர் பதவியில் மாற்றம் எதுவும் இல்லை என அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ள நிலையில், ...

SLMC யின் தீர்மானத்திற்கு நீதிமன்றம் இடைக்கால தடை!

கொழும்பு மாநகர சபை வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்ததற்காக...

அச்சமற்ற துணிகரமான ஊடகவியலாளர்: மறைந்த இக்பால் அத்தாஸ் அனுதாபச் செய்தியில் ஹக்கீம்

பாதுகாப்பு மற்றும் அரசியல் விவகாரங்களில் அச்சமின்றி துணிச்சலுடனும், தன்னம்பிக்கையுடனும் எழுதிய சிறப்பான...