7 ஆண்டுகளுக்கு பிறகு ஈரான் நாட்டுக்குச் சென்ற சவூதி அமைச்சர்!

Date:

டெஹ்ரான்,-ஈரான் – சவூதி அரேபியா நாடுகளுக்கு இடையே ஏழு ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் நட்புறவு ஏற்பட்ட நிலையில், சவூதியின் வெளியுறவுத் துறை அமைச்சர் இளவரசர் பைசல் பின் பர்ஹான் நேற்று ஈரான் சென்றார்.

மேற்காசிய நாடான சவூதி அரேபியாவில், ஷியா முஸ்லிம் பிரிவு மதகுரு ஷேக் அல்நிமர் உட்பட, 47 பேருக்கு, 2016ல் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது.

இந்த சம்பவம் பல்வேறு நாடுகளில் வாழும் ஷியா பிரிவினர் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியதுடன் ஷியா பிரிவினர் அதிகம் வாழும் மேற்காசிய நாடான ஈரானிலும் இந்த விவகாரம் பெரிதாக பேசப்பட்டது.

இதனால், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டது. இதையடுத்து, ஈரான் உடனான உறவை முறித்துக் கொள்வதாக சவூதி அரேபியா அறிவித்தது.

இரு நாடுகளுக்கும் இடையே மீண்டும் நட்புறவு ஏற்பட உலக நாடுகள் முயற்சி மேற்கொண்டன.

இந்த விடயத்தில் மத்தியஸ்தம் செய்து, இருநாட்டு பிரதிநிதிகளுடனும் சீனா தொடர்ந்து ஆலோசனை நடத்தியதன் பலனாக, கடந்த மார்ச்சில் சவூதி யும், ஈரானும் சமாதானம் அடைந்தன.

இருநாட்டு உறவுகளும் மீண்டும் புதுப்பிக்கப்பட்டதை அடுத்து, ஈரான் மற்றும் சவூதி அரேபியாவின் ராஜாங்கப்பணிகள் தூதரககள் வாயிலாக சமீபத்தில் தொடங்கின.

இதன் அடுத்தகட்டமாக, ஈரான் சென்றுள்ள சவூதி அரேபியாவின் வெளியுறவு அமைச்சர் இளவரசர் பைசல் பின் பர்ஹான், சவூதி அரேபியாவுக்கான துாதரகத்தை அதிகாரப் பூர்வமாக திறந்து வைக்க உள்ளார்.

அவரை , ஈரான் வெளியுறவு அமைச்சர் ஹுசைன் அமிராப் தொல்லாஹியன் வரவேற்றார்.

இருவரும் இரு நாட்டு உறவுகள் குறித்து பேச்சு நடத்தினர். இது குறித்து ஈரான் அமைச்சர் அமிராப் கூறுகையில்,

“சூடானில் போர் தொடர்வது குறித்து நாங்கள் எங்கள் கவலையை தெரிவித்தோம்.
”மேலும் சில பிராந்திய மற்றும் சர்வதேச விவகாரகள் குறித்தும் விவாதித்தோம்,” என்றார்.

Popular

More like this
Related

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் காரணமாக இலங்கை பொருளாதாரத்தில் ஏற்படக்கூடிய தாக்கம் குறித்து கலந்துரையாடல்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போதைய போர்ச் சூழல் காரணமாக இலங்கையின் பொருளாதாரத்தில்...

புத்தளம் ஆதார வைத்தியசாலை மத்திய அரசாங்கத்தின் கீழ்:

தற்போது வடமேல் மாகாண சபையின் கீழ் இயங்கி வரும் புத்தளம் ஆதார...

ஐக்கிய அரபு அமீரக ஜனாதிபதியுடன் ஜனாதிபதி அநுர பேச்சு!

ஐக்கிய அரபு அமீரகம் அண்மையில் எதிர்கொண்ட தாக்குதல்கள் குறித்துத் தனது கவலையைத்...

இலங்கை கடற்பரப்பில் ஈரானிய கப்பல் மீதான தாக்குதலில் 100-க்கும் மேற்பட்டோர் மாயம்: ரெய்ட்டர்ஸ் தகவல்

இலங்கை கடற்கரையில் ஈரானிய கப்பலின் மீது சந்தேகத்திற்கிடமான நீர்மூழ்கிக் கப்பல் நடத்திய...