7500 ஆசிரியர்களுக்கு இன்று நியமனக் கடிதங்கள்!

Date:

கல்வியற் கல்லூரிகளில் டிப்ளோமா கற்கையை பூர்த்தி செய்த 7500 பேருக்கான ஆசிரியர் நியமனங்கள் இன்று(16) வழங்கப்படவுள்ளன.

அலரிமாளிகையில் நடைபெறவுள்ள இந்த நிகழ்ச்சியில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் நியமனக் கடிதங்கள் வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

தேசிய பாடசாலைகள், ​மேல் மாகாண பாடசாலைகளில் கற்பிக்க தெரிவு செய்யப்பட்டவர்களுக்கான நியமனங்களும் இங்கு வழங்கப்படவுள்ளன.

தேசிய பாடசாலைகளுக்கு ஆயிரத்து 700 பேர் நியமிக்கப்படவுள்ளனர்.

ஆரம்பப் பிரிவு, சாதாரணதர பாடங்கள், உடற்கல்வி ஆசிரியர்களுக்கான நியமனங்களும் இன்று(16) வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

இலங்கை கடற்பரப்பில் ஈரானிய கப்பல் மீதான தாக்குதலில் 100-க்கும் மேற்பட்டோர் மாயம்: ரெய்ட்டர்ஸ் தகவல்

இலங்கை கடற்கரையில் ஈரானிய கப்பலின் மீது சந்தேகத்திற்கிடமான நீர்மூழ்கிக் கப்பல் நடத்திய...

சலாம் ரமழான் 2026: கொழும்பு கிரீன் பாத்தில் தொடங்கிய கலாசார விழா!

இலங்கையின்  முஸ்லிம் கலாசாரத் திருவிழாவான ‘சலாம் ரமழான் 2026’, மேல் மாகாண...

உத்தேச முஸ்லிம் விவாகரத்து சட்ட சீர்திருத்தம் தொடர்பில் இலங்கை காதிமார் சம்மேளனத்தின் முன்மொழிவுகள்

முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்துச் சட்டத்தில் (MMDA) முன்மொழியப்பட்டுள்ள சீர்திருத்தங்கள் தொடர்பாக...

மத்திய கிழக்கிற்கான விமான சேவைகள் மீண்டும் ஆரம்பம்!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்ட போர் மோதல்கள் காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த...