‘உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு தொடர்பில் அரசாங்கம் இன்னும் இறுதி தீர்மானம் எடுக்கவில்லை’

Date:

உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு தொடர்பில் அரசாங்கம் இன்னும் இறுதித் தீர்மானம் எடுக்கவில்லை என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெளிவுபடுத்தியுள்ளார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்..

​​உள்நாட்டு கடன் மேம்படுத்தல் வேலைத்திட்டம் தொடர்பில் நாட்டில் பல்வேறு தரப்பினரால் பரப்பப்படும் பொய்யான தகவல்கள் தொடர்பில் இராஜாங்க அமைச்சர்   கருத்து தெரிவித்துள்ளார்.

இந்த விடயத்தில் அரசாங்கம் இறுதித் தீர்மானத்தை எடுக்கவில்லை என்றும், உள்நாட்டுக் கடனை மேம்படுத்துவது தொடர்பான உணர்திறனை மேலும் வலியுறுத்தியதுடன், இந்தப் பிரச்சினையை அரசாங்கம் மிகுந்த பொறுப்புடன் அணுகுவதாக உறுதியளித்தார்.

இலங்கையின் வங்கி மற்றும் நிதி அமைப்பின் ஸ்திரத்தன்மையை நிலைநிறுத்துவதற்காக மேம்படுத்தப்பட்ட இலக்கை அடைவதற்கான அரசாங்கத்தின் அர்ப்பணிப்பை அமைச்சர் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.

Popular

More like this
Related

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...

இலங்கையின் ஏற்றுமதி 14 பில்லியன் டொலர்களை எட்டியது!

2025 ஆம் ஆண்டின் முதல் பத்து மாதங்களில் நாட்டின் மொத்த ஏற்றுமதிகள்...