‘உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு தொடர்பில் அரசாங்கம் இன்னும் இறுதி தீர்மானம் எடுக்கவில்லை’

Date:

உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு தொடர்பில் அரசாங்கம் இன்னும் இறுதித் தீர்மானம் எடுக்கவில்லை என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெளிவுபடுத்தியுள்ளார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்..

​​உள்நாட்டு கடன் மேம்படுத்தல் வேலைத்திட்டம் தொடர்பில் நாட்டில் பல்வேறு தரப்பினரால் பரப்பப்படும் பொய்யான தகவல்கள் தொடர்பில் இராஜாங்க அமைச்சர்   கருத்து தெரிவித்துள்ளார்.

இந்த விடயத்தில் அரசாங்கம் இறுதித் தீர்மானத்தை எடுக்கவில்லை என்றும், உள்நாட்டுக் கடனை மேம்படுத்துவது தொடர்பான உணர்திறனை மேலும் வலியுறுத்தியதுடன், இந்தப் பிரச்சினையை அரசாங்கம் மிகுந்த பொறுப்புடன் அணுகுவதாக உறுதியளித்தார்.

இலங்கையின் வங்கி மற்றும் நிதி அமைப்பின் ஸ்திரத்தன்மையை நிலைநிறுத்துவதற்காக மேம்படுத்தப்பட்ட இலக்கை அடைவதற்கான அரசாங்கத்தின் அர்ப்பணிப்பை அமைச்சர் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.

Popular

More like this
Related

SLMC யின் தீர்மானத்திற்கு நீதிமன்றம் இடைக்கால தடை!

கொழும்பு மாநகர சபை வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்ததற்காக...

அச்சமற்ற துணிகரமான ஊடகவியலாளர்: மறைந்த இக்பால் அத்தாஸ் அனுதாபச் செய்தியில் ஹக்கீம்

பாதுகாப்பு மற்றும் அரசியல் விவகாரங்களில் அச்சமின்றி துணிச்சலுடனும், தன்னம்பிக்கையுடனும் எழுதிய சிறப்பான...

நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை குறைவடையும் வாய்ப்பு!

நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை நாளையிலிருந்து (15) குறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக,...

சத்தியாகிரக போராட்டத்தை கைவிட்ட விமல்!

புதிய கல்விச் சீர்திருத்தங்களை அடுத்த வருடம் வரை ஒத்திவைப்பதாக அரசாங்கம் அறிவித்ததைத்...