ஒரு நாள் சேவையின் கீழ் பெறப்படும் கடவுச் சீட்டுக்கான கட்டணம் குறைப்பு

Date:

ஒரு நாள் சேவையின் கீழ் பெறப்படும் கடவுச் சீட்டுக்கான கட்டணங்களை குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, ஒரு நாள் சேவை மூலம் கடவுச் சீட்டுக்களை பெற்றுக் கொள்வதற்கு இதுவரை காலமும் 20,000 ரூபா கட்டணம் அறவிடப்பட்ட நிலையில் தற்போது அதனை 15,000 ரூபாவாக குறைக்கப்படவுள்ளதாக குடிவரவு , குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் இலுக்பிட்டிய தெரிவித்துள்ளார்.

தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பிரதேச செயலாளர் அலுவலகத்தின் மூலம் ஒன்லைன் ஊடாக விண்ணப்பிக்கும் நடைமுறையில் அதனை குறைக்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

குறித்த புதிய திட்டத்தின் கீழ், ஒன்லைன் மூலமாக விண்ணப்பிப்போர் வழமையான முறையில் 14 நாட்களுக்குள் தமக்கான கடவுச் சீட்டை பெற்றுக் கொள்ள முடியும் எனவும் ஒன்லைன் மூலம் கடவுச் சீட்டுக்கு விண்ணப்பிக்கும் நடவடிக்கைகள் வெற்றிகரமாக முன்னெடுப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

 

Popular

More like this
Related

ஞானசார தேரர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு பிணையில் விடுதலை!

இஸ்லாமிய மார்க்கத்திற்கு அவதூறு விளைவிக்கும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில், பொதுபல...

இலங்கை – இத்தாலி இடையே சாரதி அனுமதிப்பத்திர ஒப்பந்தம் ஏப்ரல் முதல் அமுல்!

இலங்கைக்கும் இத்தாலிக்கும் இடையேயான நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திர உரிமம் பரஸ்பர...

‘அல் மன்ஹஜ்ஜுஸ் ஸஹீஹ்’: சமூக ஒருமைப்பாட்டை பேணுவதில் கவனம் செலுத்த வேண்டும்

இலங்கைத் திருநாட்டின் தேசிய வரைபடத்தில், முஸ்லிம் சமூகம் என்பது எப்போதும் 'வேற்றுமைக்குள்...

சொத்து விபரங்களை வழங்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு 2 வார காலக்கெடு!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், தனது சொத்து மற்றும் பொறுப்புக்கள்...