தனியார் பல்கலைக்கழகங்களிலும் மாணவர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்படும்: பிரதமர் தினேஷ் குணவர்தன!

Date:

அரச பல்கலைக்கழகங்கள் மாத்திரமன்றி தனியார் பல்கலைக்கழகங்களுக்கும் வாய்ப்பு கிடைக்கும் வகையில் சிறுவர்களுக்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பது மிகவும் முக்கியமானது எனவும், தான் கல்வி அமைச்சராக இருந்த போது அந்த வாய்ப்புகளை அதிகரிக்க நடவடிக்கை எடுத்ததாகவும் பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

இது தொடர்பில் கடன் வழங்குவதில் ஏற்பட்டுள்ள நிதிப்பிரச்சினைகளை தீர்க்க அரசாங்கம் செயற்பட்டு வருவதாக பாராளுமன்றத்தில் அறிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். உயர்கல்விக்கான பட்டப் படிப்புகளை மேற்கொள்வதற்காக அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் வட்டியில்லா கடன் திட்டத்தின் 2021/2022 தொகுதிக்கான வர்த்தமானி அறிவித்தல் இன்னும் வெளியிடப்படவில்லை என இது தொடர்பான கேள்வி எழுப்பப்பட்டது.

எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்ட விடயம் தொடர்பில் பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தார். இதனை கல்வி அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்றதுடன் நிதி ஒதுக்கீடுகள் தொடர்பில் எடுக்க வேண்டிய நடவடிக்கை தற்போது விவாதிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.

நான் கல்வி அமைச்சராக இருந்த போது, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் காலத்தில் மிகக் குறுகிய காலத்திற்கு பல தனியார் பல்கலைக்கழகங்களுக்கு இந்த வசதியை வழங்கியிருந்ததை நினைவு கூற விரும்புகின்றேன்.

அத்தகைய அளவை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. எனவே, இந்தப் பிள்ளைகள் பல்கலைக்கழகம் செல்வது மட்டுமன்றி, தனியார் பல்கலைக்கழகங்களில் வாய்ப்பு பெறுபவர்களுக்கும் மிகவும் முக்கியமானது என நான் கருதுகிறேன், என்று அவர் மேலும் தெரிவித்தார்!

Popular

More like this
Related

மத்திய கிழக்கு மோதல்கள் காரணமாக நான்கு இலங்கையர்கள் காயம்!

மத்திய கிழக்கில் நடந்து வரும் மோதல்கள் காரணமாக மொத்தம் நான்கு இலங்கையர்கள்...

குணமடைந்த 22 ஈரானிய மாலுமிகள் கொக்கல முகாமிற்கு!

தாக்குதலுக்குள்ளான ‘IRIS Dena’ கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, கராபிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை...

ஈரான் கப்பல் மீட்பு விவகாரம்: இலங்கை அரசுக்கு ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு!

ஈரான் கப்பலையும் அதிலிருந்தவர்களையும் மீட்பதற்காக இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட தலையீட்டை ஐக்கிய...