நேற்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலையில் திருத்தம் !

Date:

நேற்று(31) நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலைகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அதற்கமைய, ஒக்டேன் 92 ரக பெற்றோல் ஒரு லீற்றரின் விலை 15 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 318 ரூபாவாகும்.

ஒக்டேன் 95 ரக பெற்றோல் ஒரு லீற்றரின் விலை 20 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 385 ரூபாவாகும்.

லங்கா சுப்பர் டீசல் ஒரு லீற்றரின் விலை 10 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 340 ரூபாவாக அமைந்துள்ளது.

மண்ணெண்ணெய் ஒரு லீற்றரின் விலை 50 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது அதற்கமைய மண்ணெண்ணெய் ஒரு லீட்டரின் புதிய விலை 245 ரூபாவாகும்.

இலங்கை தொழில்நுட்ப மண்ணெண்ணெய் விலை 60 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 270 ரூபாவென மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர்  சானக்க தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

Online விளையாட்டிற்கு அடிமையான மாணவன் தவறான முடிவெடுத்து தற்கொலை!

யாழ்ப்பாணத்தில் ஆன்லைன் விளையாட்டிற்கு (Online Games) அடிமையான 19 வயதுடைய பாடசாலை...

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகலில் மழை

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் இன்று (30) பி.ப. 1.00 மணிக்குப் பின்னர்...

சுரேஷ் சலே நீதிமன்ற வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்...

இலங்கையில் முகத்தை வெண்மையாக்கும் கிரீம் பயன்படுத்துபவர்களுக்கு நுகர்வோர் விவகார அதிகார சபை எச்சரிக்கை!

நுகர்வோர் விவகார அதிகார சபை பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இலங்கை சந்தையில்...