பலஸ்தீனியர்கள் உயிரிழப்பிற்கு எதிராக இஸ்ரேலியர்கள் பேரணி

Date:

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அரசாங்கத்தின் நீதித்துறையை மறுசீரமைப்பதற்கான சர்ச்சைக்குரிய திட்டங்களையும், நாட்டில் பலஸ்தீனிய சமூகங்களை தாக்கும் கொடிய வன்முறையையும் எதிர்த்து இஸ்ரேல் முழுவதும் பல நகரங்களை முற்றுகையிட்டு இலட்சக்கணக்கான மக்கள் 23 வது வாரமாக தொடர்ந்தும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த ஜனவரி மாதம் நெதன்யாகுவின் தீவிர வலதுசாரி அரசாங்கம் பதவியேற்ற சிறிது நேரத்திலேயே ஆரம்பமாகிய இப்போராட்டத்தில் தற்போது இலட்சக்கணக்கான மக்கள் ஒன்றிணைந்துள்ளனர்.

முன்மொழியப்பட்ட சட்ட மாற்றங்களை தாமதப்படுத்துவதற்குப் பதிலாக அரசாங்கம் அதனை இரத்து செய்யும் வரை தாங்கள் இப்போராட்டத்தை கைவிடப் போவதில்லை என அவர்கள் கூறியுள்ளனர்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து, சுமார் 102 பலஸ்தீனியர்களும் இஸ்ரேலியர்களும் வன்முறையில் கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Popular

More like this
Related

எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்துமாறு கோரிக்கை

மத்திய கிழக்கு மோதல்கள் காரணமாக ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடியை எதிர்கொள்வதற்காக, முடிந்தவரை...

நெதன்யாகு எங்கே? இஸ்ரேல் பிரதமர் குறித்து பரவும் மர்மம்: ஈரான் ஊடகம் எழுப்பும் அடுக்கடுக்கான கேள்விகள்.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உயிரிழந்திருக்கலாம் அல்லது படுகாயமடைந்திருக்கலாம் என்ற யூகங்கள்...

பல்துறை அறிஞர் பேராசிரியர் நகீப் அத்தாஸ் மறைந்தார்.!

பொதுவாக அறிவுலகத்திற்கும், உலக முஸ்லிம் சமூகத்திற்கும் பெரும் அறிவுப் பங்களிப்பை வழங்கிய...

வாகன இலக்கத் தகடு : புதிய நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையெழுத்து

மோட்டார் வாகனங்களுக்கான இலக்கத் தகடுகளை அச்சிடும் பணியைப் புதிய நிறுவனமொன்றிடம் ஒப்படைப்பதற்கான...