வார இறுதி நாட்களில் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டங்கள்

Date:

இந்த வார இறுதியில் பாடசாலைகளிலும் அதனை அண்மித்த பகுதிகளிலும் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை நேற்று முடிவடைந்த நிலையில், பாடசாலைகள் எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர் விசேட வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, நாடு முழுவதும் உள்ள பாடசாலை நிர்வாகங்களின் ஆதரவுடன், பாடசாலைகளுக்கு அருகாமையில் நுளம்புகள் உற்பத்தியாகும் இடங்களை அழிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

கொழும்பு மாநகர சபை அதிகாரிகளின் பங்களிப்புடன் கொழும்பு நகர எல்லைக்குள் விசேட ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

இந்த வருடத்தில் அதிகளவான டெங்கு நோயாளர்கள் கொழும்பு மற்றும் கம்பஹாவில் பதிவாகியுள்ளனர்.

கடந்த பல வாரங்களாக டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்ட போதிலும், இவ்வருடம் பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 41,000 கடந்துள்ளது.

ஐந்து மாதங்களில் மட்டும் 25க்கும் மேற்பட்ட டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ளன.

Popular

More like this
Related

49வது சென்னை புத்தக கண்காட்சி: தமிழ் உலகின் மிகச்சிறந்த புத்தக கண்காட்சி ஜனவரி 8 முதல் 21 வரை சென்னை நந்தனம் அரங்கில்..!

சென்னை நந்தனத்தில் அமைந்துள்ள YMCA மைதானத்தில் நடைபெற்று வரும் புத்தக விற்பனையாளர்கள்...

‘பிரதமர் பதவியில் மாற்றமில்லை’: அரசின் அறிவிப்பு சொல்வதென்ன? சிரேஷ்ட சட்டத்தரணி பாரிஸ் சாலி.

பிரதமர் பதவியில் மாற்றம் எதுவும் இல்லை என அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ள நிலையில், ...

SLMC யின் தீர்மானத்திற்கு நீதிமன்றம் இடைக்கால தடை!

கொழும்பு மாநகர சபை வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்ததற்காக...

அச்சமற்ற துணிகரமான ஊடகவியலாளர்: மறைந்த இக்பால் அத்தாஸ் அனுதாபச் செய்தியில் ஹக்கீம்

பாதுகாப்பு மற்றும் அரசியல் விவகாரங்களில் அச்சமின்றி துணிச்சலுடனும், தன்னம்பிக்கையுடனும் எழுதிய சிறப்பான...