வார இறுதி நாட்களில் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டங்கள்

Date:

இந்த வார இறுதியில் பாடசாலைகளிலும் அதனை அண்மித்த பகுதிகளிலும் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை நேற்று முடிவடைந்த நிலையில், பாடசாலைகள் எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர் விசேட வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, நாடு முழுவதும் உள்ள பாடசாலை நிர்வாகங்களின் ஆதரவுடன், பாடசாலைகளுக்கு அருகாமையில் நுளம்புகள் உற்பத்தியாகும் இடங்களை அழிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

கொழும்பு மாநகர சபை அதிகாரிகளின் பங்களிப்புடன் கொழும்பு நகர எல்லைக்குள் விசேட ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

இந்த வருடத்தில் அதிகளவான டெங்கு நோயாளர்கள் கொழும்பு மற்றும் கம்பஹாவில் பதிவாகியுள்ளனர்.

கடந்த பல வாரங்களாக டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்ட போதிலும், இவ்வருடம் பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 41,000 கடந்துள்ளது.

ஐந்து மாதங்களில் மட்டும் 25க்கும் மேற்பட்ட டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ளன.

Popular

More like this
Related

திஹாரிய தன்வீர் அகடமி ஏற்பாடு செய்த ‘நபிகள் நாயகம்’ பற்றிய கண்காட்சி தொடர்பான படங்கள்!

திஹாரிய தன்வீர் அகடமி ஏற்பாடு செய்த 'பிரபஞ்சத்துக்கு அருளான முஹம்மது நபி ஸல்லல்லாஹு...

165,512 வாகன இலக்கத் தகடுகள் இன்னும் நிலுவையில்!

புதிய வாகன இலக்கத் தகடுகளை வழங்கும் பணியில் ஏற்பட்டுள்ள தாமதத்தை போக்குவரத்து,...

நவம்பர் 30ஆம் திகதி முதல் பஸ்களில் வங்கி அட்டைகள் மூலம் கட்டணம் செலுத்த வாய்ப்பு.

டிக்கெட் இயந்திரங்கள் மூலம் பயணச்சீட்டுக்கள் வழங்கப்படும் பஸ்களில், பயணிகள் வங்கி அட்டைகளைப்...

30ஆவது வருட நிறைவையிட்டு கொழும்பு பங்குச் சந்தையில் மணியோசை எழுப்பிய CDB

நிதியியல் விசேடத்துவம் மற்றும் புத்தாக்கத்தில் தனது வலுவான இடத்தை வலியுறுத்தியபடி, இலங்கையின்...