விடுதலைப் புலிகளினால் கொல்லப்பட்ட முஸ்லிம்களை நினைவுகூறும் வகையில் கல்குடா பகுதியில் நினைவுத் தூபி திறந்து வைப்பு!

Date:

கல்குடா பிரதேசத்தில் விடுதலைப் புலிகளினால் கொலை செய்யப்பட்ட முஸ்லிம் சமூகத்தவர்களை நினைவுகூர்ந்து பெயர்கள் அடங்கிய நினைவுத் தூபி ஒன்று சனியன்று (24) திறந்து வைக்கப்பட்டுள்ளது.

முப்படையினரைப் பிரதிநிதித்துவப்படுத்தி 233வது படைப்பிரிவின் கட்டளையிடும் அதிகாரி கேணல் கமல் டி சில்வா, வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி வசந்த பண்டார, கல்குடா பொலிஸ் பொறுப்பதிகாரி சந்திரகுமார ஆகியோரும் நிகழ்வில் பங்கெடுத்தனர்.

இராணுவ மற்றும் பொலிஸ் அதிகாரிகள் இணைந்து நினைவுத் தூபியை திரைநீக்கம் செய்தனர்.

விடுதலைப்புலிகளால் கொல்லப்பட்ட முஸ்லிம்களின் பெயர்களும் நினைவுத்தூபியில் பொறிக்கப்பட்டுள்ளது.

பொலனறுவையில் இருந்து வருகை தந்த சிங்கள மக்கள் மற்றும் ஓட்டமாவடியைச் சேர்ந்த முஸ்லிம் மக்களும் நினைவுத் தூபி திறப்பு நிகழ்வில் பங்கெடுத்திருந்தனர்.

Popular

More like this
Related

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் கடமைகளை பொறுபேற்றார்.

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் சுல்தான் ...

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சமர்ப்பித்த மனு அடுத்த மாதம் ஒத்திவைப்பு

இலஞ்ச ஆணைக்குழுவினால் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் தன்னை கைது செய்யப்படுவதற்கு முன்...

காசா நகரை கைப்பற்ற இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல்!

காசாவின் நகரப் பகுதியை முழுமையாகக் கைப்பற்றும் பெஞ்சமின் நெதன்யாகுவின் திட்டத்திற்கு இஸ்ரேலிய...