ஹஜ் யாத்திரிகர்கள் ஒன்று திரளும் கூடாரங்களின் நகரம் மினா: வான்வழி காட்சிகள்!

Date:

நேற்றையதினம் சவூதி அரேபியாவின் முக்கிய பகுதியான மினாவில் கூடாரங்களின் வான்வழி காட்சி அனைவரின் கண்களுக்கும் விருந்தளிக்கும் அளவிற்கு, காணப்பட்டது.

ஹஜ் யாத்திரிகர்கள் மினா பகுதிக்கு கால்நடையாகவும் பஸ் மூலமாகவும் சென்றதுடன் அங்கு அவர்கள் உலகின் மிகப்பெரிய கூடார நகரமான மினாவில் முகாமிட்டார்கள்.

இஸ்லாமிய சந்திர நாட்காட்டியின் படி துல்ஹிஜ்ஜா மாதத்தின் 8, 11 மற்றும் 12 ஆம் திகதிகளில் ஹஜ்ஜின் போது யாத்திரிகர்கள் தங்கியிருப்பதால் மினா பகுதி மில்லியன் கணக்கானவர்களின் காணப்படுகின்றது.

கிராண்ட் மசூதிக்கு கிழக்கே 5 கிமீ தொலைவில் உள்ள மினா பள்ளத்தாக்கு, 100,000க்கும் மேற்பட்ட குளிரூட்டப்பட்ட கூடாரங்களால் மூடப்பட்ட ஒரு திறந்தவெளி ஆகும், இங்கு 2.6 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தங்கலாம்.

 

கூடாரங்கள் மூன்று அளவுகள் எட்டு சதுர மீட்டர், ஆறு,எட்டு மீட்டர்  அளவில் அமைக்கப்பட்டிருக்கும்.

கூடாரங்கள் நடைபாதை, ஒளிரும் மற்றும் அடையாளமிடப்பட்ட தாழ்வாரங்கள் வழியாக ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளன.

அராஃபத் மலை ஏறுவதற்குத் தயாராகும் வகையில் கலந்துகொள்பவர்கள் போதுமான அளவு ஓய்வெடுக்கவும் தூங்கவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

ஹஜ்ஜாஜிகள் பொழுது புலர்வதற்கு முன்பிருந்து மினாவிலிருந்து புறப்பட்டு அரபா நோக்கிச் செல்வார்கள். சூரியன் மறையும் வரை அவர்கள் அரபாவின் எல்லைக்குள் தரித்து நிற்பது கடமையாகும்.

சூரியன் மறைந்தவுடன் அங்கிருந்து புறப்பட்டு சுமார் ஆறு கிலோ மீட்டர் தூரத்திலுள்ள முஸ்தலிபாவில் அன்றைய இரவைக் கழிப்பார்கள்.

ஹரம் எல்லைக்கு வெளியில் ஹஜ்ஜோடு தொடர்புபட்ட ஒரே இடம் அரபா மட்டுமேயாகும்.

அரபாவானது மக்காவிலிருந்து சுமார் 22 கிலோமீற்றர் தூரத்திலும் மினாவிலிருந்து 10 கிலோமீற்றர் தூரத்திலும் அமைந்துள்ளது.

Popular

More like this
Related

சுரேஷ் சலே நீதிமன்ற வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்...

இலங்கையில் முகத்தை வெண்மையாக்கும் கிரீம் பயன்படுத்துபவர்களுக்கு நுகர்வோர் விவகார அதிகார சபை எச்சரிக்கை!

நுகர்வோர் விவகார அதிகார சபை பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இலங்கை சந்தையில்...

பிரிமா கோதுமை மாவின் விலை அதிகரிப்பு

பிரிமா (Prima) நிறுவனத்தினால் கோதுமை மாவின் விலை இன்று (29) முதல்...

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இன்று நீதிமன்றத்தில் ஆஜர்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று (29) நீதிமன்றத்தில்...