கடந்தாண்டில் 463 யானைகள் உயிரிழப்பு: கடந்த தசாப்தத்தில் அதிகபட்ச உயிரிழப்பாகும்

Date:

2022 ஆம் ஆண்டில் 463 யானைகள் உயிரிழந்துள்ளதாக இலங்கை சுற்றாடல் மற்றும் இயற்கை ஆய்வுகளுக்கான நிலையம் உறுதிப்படுத்தியுள்ளது.

கடந்த பத்தாண்டுகளில் உயிரிழந்த யானைகளில் கடந்தாண்டே பெருமளவான யானைகள் உயிரிழந்துள்ளதாக மையத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளரான கலாநிதி ரவீந்திர காரியவசம் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவங்களில் பெரும்பாலானவை மனித ஈடுபாட்டினால் ஏற்படுவதாகவும் ரவீந்திர காரியவசம் தெரிவித்தார்.

யானைகளின் எண்ணிக்கையை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால், அது சுற்றுலாத்துறைக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.

இந்த நிலை தொடருமானால், இலங்கையில் காட்டு யானையைக் கண்டறிவது அரிதான நிகழ்வாகிவிடும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...