சவூதியில் உயர் சம்பளத்துடன் வேலைவாய்ப்பு: ஒப்பந்தம் கைச்சாத்து

Date:

 இலங்­கை­யர்­க­ளுக்கு உயர்  சம்­ப­ளத்­துடன் சவூதி அரே­பி­யாவில் வேலை வாய்ப்­பு­களைப் பெற்­றுக்­கொ­டுப்­ப­தற்­கான வேலைத் திட்­ட­மொன்­றினை இலங்கை தொழிற்­கல்வி ஆணைக்­குக்­குழு சவூதி அரே­பி­யாவின் அனு­ச­ர­ணை­யுடன் ஆரம்­பித்­துள்­ளது.

தேர்ந்­தெ­டுக்­கப்­பட்ட 23 தொழில் துறை­களில் சவூதி அரே­பி­யாவில் வேலை­வாய்ப்­பு­களைப் பெற்­றுக்­கொ­டுக்கும் இத்­திட்­டத்­திற்­கான உடன்­ப­டிக்கை கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மற்றும் இலங்­கை­யி­லுள்ள சவூதி அரே­பி­யாவின் தூது­வ­ருக்­கு­மி­டையில் அண்­மையில் கைச்­சாத்­தி­டப்­பட்­டது.

குறிப்­பிட்ட உடன்­ப­டிக்கை கடந்த 11 ஆம் திகதி முதல் அமுலில் உள்­ள­தாக தொழிற்­கல்வி ஆணைக்­கு­ழுவின் பணிப்­பா­ளர் ­நா­யகம் கே.ஏ.லலி­த­தீர தெரி­வித்தார்.

மொரட்­டு­வ­யி­லுள்ள இலங்கை – ஜெர்­மனி தொழில்­நுட்ப பயிற்சி நிறு­வனம், ஒரு கொட­வத்த கொரியா – இலங்கை தேசிய தொழிற்­ப­யிற்சி நிறு­வனம் மற்றும் மொரட்­டுவ கைத்­தொழில் பொறி­யியல் பயிற்சி நிறு­வனம் எனும் நிறு­வ­னங்­களில் இது தொடர்­பான திற­மை­களை உறுதி செய்­வ­தற்­கான பரீட்­சை­களை நடாத்­து­வ­தற்கு திட்­ட­மி­டப்­பட்­டுள்­ள­தா­கவும் தொழிற்­கல்வி ஆணைக்­குழு தெரி­வித்­துள்­ளது.

பரீட்­சை­களில் சித்­தி­ய­டை­ப­வர்­களின் அனைத்து தக­வல்­களும், முடி­வு­களும் சவூதி அரே­பி­யாவின் அரச தகவல் மையத்­துக்கு அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் ஆணைக்­குழு தெரி­வித்­துள்­ளது.

இது தொடர்­பான மேல­திக விப­ரங்­களை தொழிற்­ப­யிற்சி கல்வி ஆணைக்­கு­ழுவின் பணிப்­பா­ள­ரி­ட­மி­ருந்து பெற்றுக்கொள்ள முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது. 071 4817629 எனும் இலக்கத்துடன் அல்லது manjula@tvec.gov.lk மின்னஞ்சலுடன் தொடர்பு கொள்ள முடியும்.

Popular

More like this
Related

நாட்டிற்கு அழைத்து வரப்படவுள்ள இஷாரா உட்பட 5 இலங்கையர்கள்

சஞ்சீவ குமார சமரரத்ன எனப்படும் 'கணேமுல்ல சஞ்சீவ' கொலை வழக்கில் முக்கிய...

‘மாற்றத்திற்கு ஏற்ப அடுத்த தலைமுறையை மாற்றுங்கள்’: புதிய கல்வி சீர்திருத்தங்கள் தொடர்பிலான முக்கிய கருத்தரங்கு!

''மாற்றத்திற்கு ஏற்ப அடுத்த தலைமுறையை மாற்றுங்கள்'' என்ற தலைப்பிலான கருத்தரங்கு எதிர்வரும்...

வளிமண்டலத்தில் மாற்றம்; நாடு முழுவதும் மழை

இன்றையதினம் (15) நாட்டின் அயன இடை ஒருங்கல் வலயம் (Intertropical Convergence...

தரம் 6 இற்கு மாணவர்களை அனுமதிப்பது தொடர்பான புதிய சுற்றுநிருபம் வெளியீடு!

5ம் தரப் புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் மாணவர்களைத் தரம்...