சுகாதார அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேணை : எதிர்க்கட்சி அறிவிப்பு

Date:

சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டுவர தீர்மானித்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டார்.

தரமற்ற மருந்துகள்  இறக்குமதி மற்றும் மருந்து இறக்குமதியில் இடம்பெற்றவரும் ஊழல் – மோசடிகளுக்கு எதிர்ப்பை வெளியிட்டுள்ள எதிர்க்கட்சி உறுப்பினர் சஜித் பிரேமதாச, இதற்கு பொறுப்புக்கூற வேண்டியவராக சுகாதார அமைச்சர் உள்ளதால் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டுவர தீர்மானித்துள்ளோம் எனவும் கூறினார்.

சுகாதார கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள மோசமான நிலைமைக்கு எதிர்ப்பை வெளியிட்டுள்ள எதிர்க்கட்சிகள், சுகாதார அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டுவரும் தீவிர முனைப்பில் ஈடுபட்டுள்ளன.

அதற்கான அறிவிப்பையே எதிர்க்கட்சித் தலைவர் இன்று பாராளுமன்றத்தில் வெளியிட்டுள்ளார்.

என்றாலும், எத்தகையை நம்பிக்கையில்லாப் பிரேரணைகளை எதிர்க்கட்சிகள் கொண்டுவந்தாலும் அவற்றை தோற்கடிப்பதில் உறுதியாகவுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அறிவித்துள்ளது.

சுகாதார அமைச்சரை பதவி நீக்க நாம் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோமென பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் கூறியுள்ளார்.

Popular

More like this
Related

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...

தொடர்ந்தும் தலைமறைவானால் ராஜிதவின் சொத்துக்கள் பறிமுதலாகும்: இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுஆணைக்குழு

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தொடர்ந்தும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானால் அவரது...

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த காலமானார்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான...

யானைகள் இறப்பு விகிதத்தில் உலகளவில் இலங்கை முதலிடம்!

யானைகள் இறப்பு விகிதத்தில் இலங்கை தற்போது உலகிலேயே முதலிடத்தில் உள்ளதாக வனவிலங்கு...