தமிழ்கட்சி உறுப்பினர்களுக்கும் அமெரிக்க தூதுவருக்கும் இடையில் இன்று சந்திப்பு

Date:

தமிழ்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங்கிற்கும் இடையில் இன்று சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.

கொழும்பில் உள்ள உயர்ஸ்தானிகர் இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது.

இதன்போது தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் சமகால பிரச்சினைகள் உள்ளிட்ட விடயங்கள் கலந்துரையாடப்படவுள்ளது.

கடந்த வியாழக்கிழமை இரா.சம்பந்தனுடன் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங்கிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது, இலங்கை தமிழ் மக்கள் மற்றும் ஏனைய சிறுபான்மையின மக்கள் எதிர்நோக்கும் சிக்கல்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

கவனம் செலுத்தப்படவேண்டிய விடயங்கள், தேசிய அடையாளங்கள், சீர்திருத்தங்கள், பொறுப்பு கூறல் மற்றும் நீதிக்கான விடயங்கள் தொடர்பில் தீர்வு காண்பதற்காக முன்னோக்கி பயணித்தல் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டதாக அமெரிக்க தூதுவர் தெரிவித்திருந்தார்.

Popular

More like this
Related

49வது சென்னை புத்தக கண்காட்சி: தமிழ் உலகின் மிகச்சிறந்த புத்தக கண்காட்சி ஜனவரி 8 முதல் 21 வரை சென்னை நந்தனம் அரங்கில்..!

சென்னை நந்தனத்தில் அமைந்துள்ள YMCA மைதானத்தில் நடைபெற்று வரும் புத்தக விற்பனையாளர்கள்...

‘பிரதமர் பதவியில் மாற்றமில்லை’: அரசின் அறிவிப்பு சொல்வதென்ன? சிரேஷ்ட சட்டத்தரணி பாரிஸ் சாலி.

பிரதமர் பதவியில் மாற்றம் எதுவும் இல்லை என அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ள நிலையில், ...

SLMC யின் தீர்மானத்திற்கு நீதிமன்றம் இடைக்கால தடை!

கொழும்பு மாநகர சபை வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்ததற்காக...

அச்சமற்ற துணிகரமான ஊடகவியலாளர்: மறைந்த இக்பால் அத்தாஸ் அனுதாபச் செய்தியில் ஹக்கீம்

பாதுகாப்பு மற்றும் அரசியல் விவகாரங்களில் அச்சமின்றி துணிச்சலுடனும், தன்னம்பிக்கையுடனும் எழுதிய சிறப்பான...