திரிபோஷாவுக்கு பதிலாக முட்டை வழங்க நடவடிக்கை!

Date:

திரிபோஷ உற்பத்தியை வழமைக்கு கொண்டு வரும் வரையில் 6 மாதம் முதல் 3 வயதுக்கு இடைப்பட்ட சிறார்களுக்கு, மாற்று போசனை திட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அரச குடும்பநல சுகாதார சேவைகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

சிறார்கள் முட்டைகளை அதிகமாக உண்ணுவதால், திரிபோஷவுக்கு மாற்றீடாக முட்டையை வழங்க அரசாங்கம் அவதானம் செலுத்த வேண்டும் என அந்த சங்கத்தின் தலைவர் தேவிகா கொடிதுவக்கு தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தினால் வழங்கப்படும் திரிபோஷ சிறுவர்களுக்கு வழங்கப்படாமல் உள்ளமை பிரச்சினையாக எழுந்துள்ளது.

மேலதிக ஊட்டச்சத்தாக வழங்கப்பட்ட திரிபோஷவை வழங்க முடியாத நிலை காணப்படுமாயின் அதற்கு நிகரான மாற்றீடு நடவடிக்கை மேற்கொள்ளப்படவேண்டும்.

குடும்பநல சேவையாளர்கள் என்ற அடிப்படையில், 6 மாதம் முதல் 3 வயதுக்கு இடைப்பட்ட சிறார்களுக்கு மீண்டும் திரிபோஷ வழங்கப்படும் வரையில், மாற்றீடாக மாதாந்தம் ஒரு  தொகை முட்டையை வழங்குவதற்கு பரிந்துரைப்பதாகவும் அரச குடும்பநல சுகாதார சேவைகள் சங்கத்தின் தலைவர் தேவிகா கொடித்துவக்கு தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

சுரேஷ் சலே நீதிமன்ற வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்...

இலங்கையில் முகத்தை வெண்மையாக்கும் கிரீம் பயன்படுத்துபவர்களுக்கு நுகர்வோர் விவகார அதிகார சபை எச்சரிக்கை!

நுகர்வோர் விவகார அதிகார சபை பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இலங்கை சந்தையில்...

பிரிமா கோதுமை மாவின் விலை அதிகரிப்பு

பிரிமா (Prima) நிறுவனத்தினால் கோதுமை மாவின் விலை இன்று (29) முதல்...

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இன்று நீதிமன்றத்தில் ஆஜர்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று (29) நீதிமன்றத்தில்...