தோரா, பைபிள் வேதநூல்களை எரிக்கும் போராட்டம் கைவிடப்பட்டது!

Date:

தோரா (தௌராத்), பைபிள் (இன்ஜீல்) வேதநூல்களை எரிக்கும் போராட்டம் கைவிடப்பட்டது.

சுவீடனில் கடந்த மாதம் துருக்கிய தூதரகம் முன்பாக புனித குர்ஆன் பிரதியொன்று எரிக்கப்பட்ட சம்பவம் இஸ்லாமிய உலகில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது.

ஆயினும் கருத்துச் சுதந்திரத்தின் பேரில் சுவீடன், ஐக்கிய அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகள் அதனை நியாயப்படுத்தி இருந்தன.

இதற்குப் பதிலடியாக அஹமத் அல்லுஷ் என்ற முஸ்லிம் இளைஞர், தோரா (தௌராத் வேதம்), பைபிள் (இன்ஜீல் வேதம்) என்பவற்றை தீயிட்டு எரிப்பதற்கான அனுமதியொன்றை அதே கருத்துச் சுதந்திரத்தின் பேரில் பெற்றுக் கொண்டிருந்தார்.

இது முன்னைய சம்பவத்தைப் பார்க்கிலும் பாரியளவில் ஐரோப்பிய நாடுகளில் தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது.

கருத்துச் சுதந்திரத்தின் பேரில் குர்ஆன் எரிப்பை நியாயப்படுத்தியவர்கள் இதனைக் கண்டிக்க வழியின்றி வாயடைத்துப் ​போய் வேறு வார்த்தைகளில் தங்கள் கண்டனங்களை பதிவு செய்யத் தலைப்பட்டார்கள்.

இந்நிலையில் நேற்றையதினம் இஸ்ரேலிய தூதரகம் முன்பாக புனித குர்ஆன் ஒன்றைச் சுமந்தபடி வருகை தந்த அஹ்மத், உலகின் கவனத்தை ஈர்க்கவே தான் தோரா மற்றும் பைபிள் வேத நூல்களை எரிக்கப் ​போவதாக அறிவித்ததாகவும், ஒரு முஸ்லிம் என்ற வகையில் எந்தவொரு வேத நூலையும் எரிக்கும் அனுமதி மார்க்க ரீதியில் தனக்கு கிடையாது என்றும், இஸ்லாம் என்பது சகல மதங்களையும் சமமாக மதிக்கும் ஒரு மார்க்கம் என்றும் மிக அழகான முறையில் இஸ்லாமிய மார்க்கம் தொடர்பான தௌிவுபடுத்தல் ஒன்றை வழங்கியிருந்தார்.

பல்லாயிரம் டொலர்கள் கொட்டி மேற்கொள்ளப்பட வேண்டிய அழைப்புப் பணியை ஒரு வெறும் அறிவிப்பின் ஊடாக அசால்டாக அவர் மேற்கொண்டு விட்டார்.

Popular

More like this
Related

சுரேஷ் சலே நீதிமன்ற வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்...

இலங்கையில் முகத்தை வெண்மையாக்கும் கிரீம் பயன்படுத்துபவர்களுக்கு நுகர்வோர் விவகார அதிகார சபை எச்சரிக்கை!

நுகர்வோர் விவகார அதிகார சபை பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இலங்கை சந்தையில்...

பிரிமா கோதுமை மாவின் விலை அதிகரிப்பு

பிரிமா (Prima) நிறுவனத்தினால் கோதுமை மாவின் விலை இன்று (29) முதல்...

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இன்று நீதிமன்றத்தில் ஆஜர்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று (29) நீதிமன்றத்தில்...