நாடு முழுவதும் உள்ள பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக சுமார் 11,450 முறைப்பாடுகள்!

Date:

நாடு முழுவதும் உள்ள பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக சுமார் 11,450 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேசிய பொலிஸ் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இந்த முறைப்பாடுகள் அனைத்தும் 2023ஆம் ஆண்டில் கிடைக்கப்பெற்றவையாகும்.

1960 என்ற இலக்கத்தின் ஊடாக 9,774 முறைப்பாடுகள் இவ்வாறு கிடைக்கப்பெற்றுள்ளன. ஏனையவை நேரடியாக கிடைக்கப்பெற்றவையாகும்.

இதுவரை சுமார் 1800 முறைப்பாடுகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக தேசிய பொலிஸ் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

சந்தேகநபர்களுக்கு எதிராக அதிகாரத்தை பிரயோகித்தமை, பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் முறைப்பாடுகளுக்கு உரிய தீர்வுகளை காணத் தவறியமை, பொலிஸ் அதிகாரங்கள் மற்றும் சலுகைகளை துஷ்பிரயோகம் செய்தமை ஆகியன இந்த முறைப்பாடுகளில் பிரதான குற்றச்சாட்டுகளாக உள்ளன.

பொலிஸ் உத்தியோகத்தர்கள் மேற்கொள்ளும் தவறுகள் தொடர்பிலான எந்தவொரு விடயம் குறித்து பொதுமக்கள் உடனடியாக முறைப்பாடு செய்ய முடியும்.

சட்டத்தின் பிரகாரம் அவர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை தேசிய பொலிஸ் ஆணைக்குழு எடுக்கும்.

1960 தொலைபேசி இலக்கம் 24 மணி நேரமும் செயல்படுவதாகவும் தேசிய பொலிஸ் ஆணைக்குழு கூறியுள்ளது.

Popular

More like this
Related

நிரந்தர சமாதானத்திற்கு மாவட்ட சர்வமத அமைப்புக்களின் பங்களிப்பு குறித்து விளக்கிய மாகாண மட்ட கலந்துரையாடல்!

இலங்கை தேசிய சமாதான பேரவை ஏற்பாடு செய்த நல்லிணக்கம் மற்றும் சமூக...

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...