மதுபான கடை திறப்பதற்கு எதிராக சம்மாந்துறை மல்வத்தை பகுதி மக்கள் ஆர்ப்பாட்டம்

Date:

சம்மாந்துறை மல்வத்தை பகுதியில் மதுபான கடை திறப்பதற்கு எதிராக மக்கள் இன்று புதன்கிழமை (05) கையெழுத்து வேட்டையும் ஆர்ப்பாட்டமும் முன்னெடுத்தனர்.
மல்வத்தை சந்தியில் மதுபானக்கடை திறப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்குமுகமாக  காலை முதல் மல்வத்தை சந்தியில் மாபெரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதில் வளத்தாப்பிட்டி மல்லிகைத்தீவு மல்வத்தை புதுநகர் கனபதிபுரம் 26ம்குளனி சடயந்தலாவ போன்ற பிரதேச மக்கள் கலந்துகொண்டுள்ளனர்.

பொதுமக்களும் கலந்து கொள்ள வேண்டும் என்று மஜீட்புரம் பள்ளிவாசல்களிலும் நிர்வாகம் ஒலிபெருக்கி மூலம் அழைப்பு விடுத்துள்ளது.

அதற்கமைய காலை பொதுமக்களும் பாடசாலை மாணவர்களும் இணைந்த ஆர்ப்பாட்டமும் கையெழுத்து வேட்டையும் ஆரம்பித்துள்ளது.

Popular

More like this
Related

சுரேஷ் சலே நீதிமன்ற வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்...

இலங்கையில் முகத்தை வெண்மையாக்கும் கிரீம் பயன்படுத்துபவர்களுக்கு நுகர்வோர் விவகார அதிகார சபை எச்சரிக்கை!

நுகர்வோர் விவகார அதிகார சபை பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இலங்கை சந்தையில்...

பிரிமா கோதுமை மாவின் விலை அதிகரிப்பு

பிரிமா (Prima) நிறுவனத்தினால் கோதுமை மாவின் விலை இன்று (29) முதல்...

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இன்று நீதிமன்றத்தில் ஆஜர்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று (29) நீதிமன்றத்தில்...