இம்முறை தேசிய மீலாத் விழாவை மன்னாரில் நடத்த விதுர விக்ரமநாயக்க தீர்மானம்!

Date:

இந்த ஆண்டுக்கான தேசிய மீலாத் விழாவை செப்டெம்பர் 28ஆம் திகதி மன்னார் மாவட்டத்தில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

புத்தசாசன, சமய விவகாரங்கள் மற்றும் கலாசார  அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்கவின் தீர்மானத்துக்கு அமைய தேசிய மீலாத் விழா கொண்டாட்டங்களுக்கென மன்னார் மாவட்டம் தெரிவு செய்யப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்டத்தில் இவ் வைபவங்களை நடத்துவதற்கு பொருத்தமான இடத்தை தெரிவு செய்வதற்கு முஸ்லிம் சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் இஸட். ஏ. எம்.பைசல் தலைமையில் அதிகாரிகள் குழு ஏற்கனவே களப்பயணம் மேற்கொண்டுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இடம்பெறும் இந்த வைபவத்தில் சபாநாயகர், அமைச்சர்கள், தூதுவர்கள், மதத் தலைவர்கள் மற்றும் புத்திஜீவிகளும் பங்கேற்க உள்ளனர்.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...