இலகு ரயில் திட்டத்தை செயற்படுத்த மீண்டும் யோசனை!

Date:

ஜப்பானின் நிதியுதவியுடன் இலகு ரயில் போக்குவரத்து (LRT) திட்டம் தொடர்பில் ஜப்பானுடன் இராஜதந்திர கலந்துரையாடல்களை ஆரம்பிக்க இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அதன்படி, கொழும்பில் உள்ள ஜப்பானிய தூதரகத்துடனான கலந்துரையாடலைத் தொடர்ந்து, மீண்டும் முன்மொழியப்பட்ட இலகு ரயில் திட்டத்தை செயற்படுத்தும் வகையில் பொருத்தமான காலக்கெடுவை தயாரிப்பதற்காக ஜனாதிபதியினால் யோசனை முன்வைக்கப்பட்டது.

அண்மையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கொழும்பு இலகு ரயில் போக்குவரத்துத் திட்டம் நிறுத்தப்பட்டமை தொடர்பில் ஜப்பானிய அரசாங்கத்திடம் மன்னிப்புக் கோரியிருந்தார்.

ஜப்பானின் நிதியுதவியுடன் கூடிய இலகு ரயில் போக்குவரத்து திட்டத்தை நிறுத்துவதற்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் அரசாங்கம் ஒருதலைப்பட்சமாக தீர்மானித்ததையடுத்து, இலங்கைக்கு 5,978 மில்லியன் இழப்பு ஏற்பட்டது.

கொழும்பு நகரின் போக்குவரத்து நெரிசலை குறைத்து, பயணிகளுக்கு சிறந்த பொது போக்குவரத்து வசதியை வழங்கும் நோக்கில் 2016 ஆம் ஆண்டு இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

அச்சமற்ற துணிகரமான ஊடகவியலாளர்: மறைந்த இக்பால் அத்தாஸ் அனுதாபச் செய்தியில் ஹக்கீம்

பாதுகாப்பு மற்றும் அரசியல் விவகாரங்களில் அச்சமின்றி துணிச்சலுடனும், தன்னம்பிக்கையுடனும் எழுதிய சிறப்பான...

நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை குறைவடையும் வாய்ப்பு!

நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை நாளையிலிருந்து (15) குறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக,...

சத்தியாகிரக போராட்டத்தை கைவிட்ட விமல்!

புதிய கல்விச் சீர்திருத்தங்களை அடுத்த வருடம் வரை ஒத்திவைப்பதாக அரசாங்கம் அறிவித்ததைத்...

போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டதற்கு பின் இஸ்ரேலின் தாக்குதல்களில் சுமார் 100 பலஸ்தீன குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர்: ஐ.நா. தகவல்.

காசாவில் போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டதற்குப் பிந்தைய இஸ்ரேலின் தாக்குதல்களில் சுமார் 100 பலஸ்தீன...