இலங்கையில் உள்ள நோர்வே தூதரகம் மூடப்படவுள்ளது!

Date:

இலங்கையில் உள்ள நோர்வே தூதரகம் எதிர்வரும் 31 ஆம் திகதி முதல் மூடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு தூதரகப் பணிகளின் வலையமைப்பில் கட்டமைப்பு மாற்றங்களை மேற்கொள்வதற்கு நோர்வே அரசாங்கம் கடந்த வருடம் தீர்மானித்தது.

இதற்கமைய, இலங்கையில் உள்ள நோர்வே தூதரகம் உட்பட ஐந்து தூதரகங்களை இந்தமாத இறுதிக்குள் நிரந்தரமாக மூடுவதற்கு அந்த நாட்டு அரசாங்கம் தீர்மானம் மேற்கொண்டுள்ளதாக இலங்கையிலுள்ள நோர்வே தூதரகம் முன்னதாக அறிவித்தது.

ஐரோப்பா மற்றும் அதற்கு அப்பாலுள்ள பல தூதரகங்களை வலுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தூதரகம் சுட்டிக்காட்டியது.

அத்துடன், இலங்கையில் உள்ள தூதரகத்தை மூடும் தீர்மானமானது இரு நாடுகளுக்கு இடையிலான உறவில் எந்தவொரு தாக்கத்தினையும் ஏற்படுத்தாது என நோர்வே தூதரகம் தெரிவித்தது.

 

Popular

More like this
Related

சுரேஷ் சலே நீதிமன்ற வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்...

இலங்கையில் முகத்தை வெண்மையாக்கும் கிரீம் பயன்படுத்துபவர்களுக்கு நுகர்வோர் விவகார அதிகார சபை எச்சரிக்கை!

நுகர்வோர் விவகார அதிகார சபை பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இலங்கை சந்தையில்...

பிரிமா கோதுமை மாவின் விலை அதிகரிப்பு

பிரிமா (Prima) நிறுவனத்தினால் கோதுமை மாவின் விலை இன்று (29) முதல்...

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இன்று நீதிமன்றத்தில் ஆஜர்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று (29) நீதிமன்றத்தில்...