இலங்கையில் ஒலிவ் பயிர்ச்செய்கையை அறிமுகப்படுத்துவது குறித்து விவசாய அமைச்சு கவனம்!

Date:

இலங்கையில் ஒலிவ் பயிர்ச்செய்கையை அறிமுகப்படுத்துவது குறித்து விவசாய அமைச்சு கவனம் செலுத்தி வருகிறது.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த அமைச்சு, இலங்கையில் ஆலிவ் பயிர்ச்செய்கைக்கு ஏற்ற காலநிலையுடன் கூடிய பிரதேசங்கள் இருப்பதாகவும், அதற்கமைய அதற்கான சாத்தியக்கூறு ஆய்வு நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளது.

ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் 19வது அமர்வு இத்தாலியின் ரோம் நகரில் இந்த நாட்களில் நடைபெறவுள்ளதுடன், இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவும் இதில் கலந்துகொண்டுள்ளார்.

இதன்படி, இந்த நாட்டில் ஒலிவ் பயிர்ச்செய்கையை விஸ்தரிப்பதற்குத் தேவையான தொழில்நுட்ப ஆதரவை வழங்குமாறு இத்தாலியின் விவசாய அமைச்சருடனான கலந்துரையாடலில் அமைச்சர் மஹிந்த அமரவீர கோரிக்கை விடுத்துள்ளார்.

இதற்கு மேலதிகமாக, இலங்கையின் மண் அமைப்புக்கு ஏற்ற திராட்சை வகை அறிமுகம், கால்நடை வளர்ப்பு முறைகளை மேம்படுத்துதல், ஆராய்ச்சி நிபுணர்களின் பரிமாற்றம், இத்தாலியில் இருந்து இலங்கையுடன் கால்நடைகளை பரிமாறிக்கொள்வதற்கான ஏற்பாடு, உணவு உற்பத்தி மற்றும் விவசாயத்துறையில் நிலையான அபிவிருத்தி போன்ற விடயங்கள் பற்றி கலந்துரையாடப்பட்டது.

Popular

More like this
Related

தாயைக் கொன்ற சவூதியர் உட்பட 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை!

சவூதி அரேபியாவில் ஒரே நாளில் எட்டு பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது....

தன்னைப் போலவே தன் சந்ததியையும் இலட்சியத்துக்காக உருவாக்க விரும்பிய ஊடகவியலாளர் அனஸ் அல்சரீப்!

இஸ்ரேலின் தாக்குதலில் உயிரிழந்த பாலஸ்தீன பத்திரிகையாளர் அனஸ் சரீபின் மனைவி, தங்கள்...

ஊடகக் குரல்களை அடக்குவது பாலஸ்தீன “இனப்படுகொலை” யின் யதார்த்தங்களை மறைக்கும் பரந்த முயற்சியின் ஒரு பகுதியாகும் – இலங்கை சுதந்திர ஊடக இயக்கம் கண்டனம்

காசா மோதலின் போது ஊடகவியலாளர்கள் கொல்லப்படுவதையும் பலஸ்தீனக் குரல்கள் அடக்கப்படுவதையும் இலங்கையின்...

இராணுவ புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராக மேஜர் ஜெனரல் மஜீத் நியமனம்

இராணுவ புலனாய்வு படையணியின் புதிய கட்டளைத் தளபதியாக சிரேஷ்ட இராணுவ அதிகாரி...