இலங்கையில் 13ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியுள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ விஜயமாக நாளை இந்தியாவுக்கு பயணிக்கவுள்ளார்.
இந்நிலையிலேயே கே.எஸ்.அழகிரி 13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இந்தியாவுக்கு இலங்கை அரசு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கான முயற்சியில் பிரதமர் மோடி ஈடுபட வேண்டுமென கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும், இலங்கை–இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு இவ்வாண்டுடன் 36 வருடங்கள் பூர்த்தியடைகின்றன.
தற்போது வரையில் அதிலுள்ள பல்வேறு முக்கிய விடயங்கள் இன்னமும் நடைமுறைப்படுத்தப்படவில்லை.
இந்நிலையில் நேற்று ஜனாதிபதி மற்றும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் சதிப்பொன்று இடம்பெற்றது.
இந்த சந்திப்பில் 13இல் பொலிஸ் அதிகாரத்தை தவிர்த்து ஏனைய அதிகாரங்களை வழங்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இணக்கம் தெரிவித்திருந்தார். இருப்பினும் இதனை தமிழ் கட்சிகள் நிராகரித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.